Tamilnadu

News March 17, 2025

சிவகாசியில் ரவுடி வெட்டிப் படுகொலை

image

சிவகாசி ஆலாவூரணியை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர் முனீஸ் நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். அவரது உடலை மீட்ட போலீசார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 17, 2025

நெல்லையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

தமிழகத்தில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் நெல்லையில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News March 17, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

நாமக்கல்லில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 1,30,956 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.

News March 17, 2025

சிஎஸ்கே போட்டிக்கு மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்

image

இந்தியாவில் 18வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ம் தேதி சனிக்கிழமை தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் மே 25ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில், மார்ச் 23ல் மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம் எனவும், போட்டி முடிந்து திரும்பும் பயணிகளுக்காக மெட்ரோ கூடுதல் நேரம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

வீட்டுக் காவலில் பாஜக மாவட்ட தலைவர்

image

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக சென்னையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவர் நெமிலி ஆனந்தன் போலீசாரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். நெமிலி சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் ஆனந்தன் வீட்டை விட்டு வெளியே செல்லாத வகையில் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

News March 17, 2025

நாமக்கல்லில் சிறப்பு ரயில் இயக்கம் விவரம்

image

நாமக்கல்லில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாமக்கல் வழியாக தினசரி இயக்கப்படும் 17235 SMVT பெங்களூரூ – நாகர்கோவில் ரயிலை பயன்படுத்தி எளிதாக செல்லலாம். தினசரி இரவு 11:00 மணிக்கு 17235 நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல் ரயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 7:20 மணிக்குள் நாகர்கோவில் சென்றடையும்.

News March 17, 2025

தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துதல் குறித்து அறிவிப்பு

image

தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்து, அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தேர்தல் நடைமுறைகளை சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு எவ்வாறு மேம்படுத்துவது? என்பது குறித்து ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் ஆலோசனைகளை தெரிவிக்கலாமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்தகவலை அரசியல் கட்சியினருக்கு SHARE பண்ணுங்க..

News March 17, 2025

குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ” திரவம் முகாம்

image

திண்டுக்கல்லில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகளுக்கு வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.

News March 17, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#குமரியில் இன்று(மார்ச் 17) காலை 9 மணிக்கு அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு மருத்துவமனைக்கு மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி 96வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு தேசிய ஊரகத் தொழிலாளர்களுக்கான ஐந்து மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

News March 17, 2025

திருவிழாவில் பக்தர்களைக் குளிர வைத்த இஸ்லாமியர்

image

காரைக்குடி மீனாட்சி புரத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வருடாந்திர மாசி பங்குனித் திருவிழா கடந்த 10 நாட்களாகக் கோலாகலமாக நடைபெற்றது. முத்துமாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் செக்காலை சாலையில் உள்ள பஜார் பள்ளிவாசல் அருகே செல்லும் போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், இஸ்லாமிய மக்கள், பக்தர்களுக்குத் தண்ணீர் தெளித்து நனையச் செய்து அவர்களின் சிரமத்தைக் குறைத்தனர்.

error: Content is protected !!