India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ரிதம் பெண்கள் சமூக பணி மையம் இணைந்து பெண்களுக்கான இலவச சணல் பை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு, அன்னை தெரசா தையல் பள்ளி, ரோசரி பள்ளி வளாகம், மேட்டுப்பாளையம், தொடர்புக்கு: 99761 – 80670, 77388 – 50094 என்ற எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே கீழ ஆம்பூர் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சத்யா என்பவர் இன்று தனது நண்பர்களுடன் ஆம்பூர் அருகே உள்ள பூவன் குறிச்சி கடனா ஆறு அணைக்கட்டு பகுதியில் குளித்த போது நீரில் மூழ்கி பலியானார். அம்பாசமுத்திரம் தீயணைப்பு துறை வீரர்கள் உடலை மீட்டு ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர் .
ராணிப்பேட்டை மாவட்டத்தில், இன்று (செப்.6) “தமிழ்நாடு காவலர் தினம்” கொண்டாடப்பட்டது. தமிழக முதல்வர் பிறப்பித்த அரசாணையின்படி கொண்டாடப்பட்ட இந்தத் தினத்தை முன்னிட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் அமைந்துள்ள நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, காவலர் தின உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் வழக்கம் போல் நாளை (செப்.7) மாலையில் 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். வழக்காக ஆதிகேசவப்பெருமாள் சன்னதியில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் தீபாராதனை சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என்றும், தொடர்ந்து கிருஷ்ணன், அய்யப்பசாமி சன்னதிகளில் தீபாராதனை நடக்கும். பின்னர் மாலை 6.30 மணிக்கு நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது இந்நிலையில் இன்று (செப்டம்பர் 06) திடீரென அதிகபட்சமாக 99.3°F டிகிரி பாரன்ஹீட் வெயில் அளவு பதிவானது. இந்நிலையில் மாலை நேரத்தில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து ரம்மியமான சூழல் நிலவியது. மேலும் பல இடங்களில் லேசான மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.
கரூர் தொகுதியில் (12.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. அரவக்குறிச்சி, பரமத்தி, தான்தோன்றி மலை, தோகைமலை பகுதிகளில் வசிப்பவர்கள் இதில் பயன் பெறலாம். இம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், ஆதார் அட்டை திருத்தம், ரேஷன் கார்டு முகவரி மாற்றம் போன்ற பல கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும். பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு சேவைகளை பெறுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.
வேலூர் கோட்ட அளவிலான அஞ்சல் குறை தீர்வு நாள் கூட்டம், வரும் 18-ம் தேதி வேலூர் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற உள்ளது. அஞ்சல் சேவை பெறும் வாடிக்கையாளர்கள், தங்கள் குறைகளை இந்தக் கூட்டத்தில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். குறைகள் குறித்த மனுக்களை வரும் 10-ம் தேதிக்குள், ‘அஞ்சலக கண்காணிப்பாளர், வேலூர்-1 என்ற முகவரிக்கு எழுதி அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனத்தில் நலம் காக்கும ஸ்டாலின் திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் அவர்கள் துவங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் கலந்து கொண்டார். சிவகங்கை ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்து ஆய்வு செய்தனர். ஏராளமான கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் பயன் பெற்றனர்.
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏ.வி.எல் மேல்நிலைப் பள்ளியில் இன்று (செப்.6) நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.
சேலம் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.