India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் சாலை விதி மீறல்கள், விபத்துகளை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் காவல்துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகரில், இரவு நேரங்களில், ஒன்வே மற்றும், அதிவேகமாக வாகனங்களில் வருபவர்கள், கண்காணிக்கப்பட்டு, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்படும். மேலும் விபத்தை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
சூளகிரியை சேர்ந்தவர் லோகநாதன், கடந்த மாதம் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை என தாய் மணிமேகலை புகார்படி, சூளகிரி போலீசார் தேடினர். இந்நிலையில், கர்நாடகா மாநில ரயில்வே போலீசார், சில நாட்களுக்கு முன், தண்டவாளத்தில், வாலிபர் சடலம் கிடப்பது குறித்து விசாரித்தனர். இந்நிலையில் அது லோகநாதன் என தெரிந்தது. அவரை மர்ம கும்பல் கொலை செய்து சடலத்தை வீசி சென்றிருக்கலாம் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 28 வயதுடைய வாலிபர் ஒருவரிடம் ஆன்லைனில் பகுதிநேர வேலை வாங்கி தருவதாக ரூ.21 லட் சத்து 29 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கேரளாவைச் சேர்ந்த அப்துல் வாகீத் (23), முகமது ஷெரீப் (26) ஆகியோரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் மோசடி புகார்களுக்கு அழையுங்கள் 1930. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
ராணிப்பேட்டையை சேர்ந்தவர் அருண் பிரகாஷ் (37).இவருக்கும் அஷ்வினி என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.இதையடுத்து அஷ்வினி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.அஷ்வினி பரிசோதனைக்காக மருத்துமனைக்கு சென்ற நிலையில் அருண் நேற்று (மார்ச்.15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
இந்திய – இலங்கை கடற்படையினர் பாதுகாப்புடன் நடந்த கச்சத்தீவு சர்ச் விழாவில் இரு நாட்டை சேர்ந்த 7000 பேர் பங்கேற்றனர். இராமேஸ்வரத்தில் இருந்து 21 கி.மீ கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் விழா மார்ச்.14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு சர்ச் வளாகத்தில் சிலுவைப்பாதை திருப்பலி பூஜை நடந்தது. சிங்கள மற்றும் தமிழ் மொழியில் பூஜை நடத்தினர். கொடி இறக்கியதும் விழா நேற்று நிறைவு பெற்றது.
ராஜா கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொலையாளிகளை அடையாளம் கண்டறிந்தனர். அவர்கள், வாண்டு மணி, வெள்ளை ராகுல், விக்னேஷ் ஆகும். மணியின் கூட்டாளியான விஜய் என்பவரிடம் சம்பவத்தன்று மதியம் ராஜா தகராறில் ஈடுபட்டு விஜய்யை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணி, தனது கூட்டாளிகள் 2 பேருடன் அன்று மாலையே ராஜாவை கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
மதுரை திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், மாரீஸ்வரன், கல்லூரி மாணவர் தர்மராஜா, ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கள ஆய்வு செய்தபோது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெருமாள் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இக்கோயில் பாண்டியர் காலத்தில் சிறந்த வழிபாட்டில் இருந்துள்ளதை இச்சிற்பங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம், என தெரிவித்தனர்.
திருப்பூர் வடக்கு போலீசார், ரயில்வே ஸ்டேஷனில் நேற்று மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கி, சந்தேகப்படும் வகையில் வந்த, வடமாநில வாலிபரிடம் விசாரித்தனர். அதில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜன், 20 என்பது தெரிந்தது. சோதனையில், 2.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம் – சென்னை சாலையில் கோனேரிக்குப்பத்தின் வழியாக, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பஸ், அவ்வழியாக வந்த கம்பெனி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் கம்பெனி ஊழியர்கள் 11 பேர் காயமடைந்தனர். ஆம்னி பஸ் டிரைவர் அனிஷ் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த ராஜா நேற்று முன்தினம் (மார்.14) தேனாம்பேட்டை அருகே நின்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் ராஜாவைச் சுற்றி வளைத்து வெட்டினர். கழுத்து, தலை பகுதிகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜாவை போலீசார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.
Sorry, no posts matched your criteria.