Tamilnadu

News May 7, 2025

சீர்காழி: மனைவியை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

image

மயிலாடுதுறை, சீர்காழியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரை அவரது கணவர் பூராசாமி குடும்ப தகராறு காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்தார். கொலை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளி பூராசாமிக்கு ஐந்தாயிரம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்துள்ளார். இதை தொடர்ந்து பூராசாமி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News May 7, 2025

திருஉத்தரகோசமங்கை சித்திரை திருவிழா நிகழ்ச்சி விவரம்

image

திரு உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் – சமேத மங்களநாயகி அம்மன் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பலரும் எதிர்பார்த்த அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சியின் அழைப்பிதழ் நேற்று(ஏப்.30) வெளியிடப்பட்டது. இன்று 01.05.2025 முதல் 12.05.2025
(சித்திரை 18 – 29) வரையிலான திருவிழாவின் நிகழ்ச்சி விவரங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.*ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

தர்மபுரியில் குட்கா கடத்தல்: 3 பேர் கைது

image

தொப்பூர் வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, தொப்பூர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ரோந்து பணியில் ஈடுபட்டார். நேற்று காலை, பப்பிரெட்டியூர் காட்டுவளவு பகுதியில், சந்தேகப்படும் படி நிறுத்தியிருந்த காரில் இருந்த, 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது 2 லட்சம்ரூபாய் மதிப்பிலான குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது. குட்கா கடத்தி வந்த 3 பேரை கைது செய்தனர்.

News May 7, 2025

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

திருப்பத்தூரில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அவசியமில்லாமல் வெளியே செல்லவேண்டாம் என கலெக்டர் க. சிவசௌந்தரவல்லி அறிவுறுத்தினார். மேலும், “உடலில் நீர்சத்து குறையாமல் தண்ணீர் குடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியோர்கள் கவனமாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

News May 7, 2025

நெல்லை மக்களுக்கு முக்கிய எண்கள்

image

▶️நெல்லை கலெக்டர்- 0462-2501222.
▶️கலெக்டரின் நேர்முக உதவியாளர்- 0462-2500224.
▶️மாவட்ட வருவாய் அலுவலா்- 0462-2500466.
▶️தனித்துணை ஆட்சியர்-04633-290548.
▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-0462-2502968.
நெல்லை மக்களே இது போன்ற முக்கிய எண்களை தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News May 7, 2025

மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் நியமணம்

image

நாகப்பட்டினம் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்தல் சேவை வழங்குவதற்காக, மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் நியமணம் செய்யப்படவுள்ளனர். உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துநர் முதுகலைப் பட்டம் பெற்ற தகுதியான நபர்கள் தங்களது சுய விவரங்களுடன் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்கள் இணைத்து மே.15க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

நாமக்கல்லில் வேலை முன் அனுபவம் தேவையில்லை!

image

நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் (ADMIN HR ) 15 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை.மாத ஊதியமாக ரூ.15,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிகிரி மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் <<>>செய்யவும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News May 7, 2025

திருச்சி சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் விபத்தில் மரணம்

image

சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட கட்டுமான சங்க மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தவர் பூமாலை (53). இவர் கடந்த ஏப்.29 தனது டூவீலரில் துறையூர்-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் பூமாலை டூவீலர் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த பூமாலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 7, 2025

புதுச்சேரி: 10th போதும், கப்பல் தளத்தில் வேலை

image

கொச்சி ஷிப்யார்ட் தளத்தில் Crane Operator, Staff Car Driver பணிகளில் காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக பணியின் அடிப்படையில் ரூ.21,300 முதல் ரூ.73,750 வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. <>www.cochinshipyard.in<<>> என்ற இணையதளம் மூலம் மே 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News May 7, 2025

திருப்பூரில் பள்ளியில் வேலை

image

திருப்பூரில் உள்ள சைனிக் பள்ளியில் காலியாக உள்ள TGT, PGT, Clerk, Ward Boy பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 10th, 12th, B.Ed, B.P.Ed, B.Sc, BA, Diploma, M.Sc, MA, MBBS, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு சம்பவளம் ரூ.22,000 முதல் ரூ.47,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே.17 ஆகும். (SHARE பண்ணங்க)

error: Content is protected !!