India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திமிரி அருகே விலாரி கிராம கூட்ரோடு அருகே முட் புதரில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. தகவல் அறிந்த திமிரி போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு 45 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. முதற்கட்ட விசாரணைக்கு பிறகு அழுகிய நிலையில் கிடந்த உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவள்ளூர்: ஆவடி, கவரப்பாளையம், கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன்(72). இவர், ஆவடியில் கைக்கடிகாரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று(ஜன.19) காலை தனது பைக்கில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சி.டி.எச் சாலையில், பின்னால் வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, அந்த வழியாக சென்ற லாரியின் பின் பகுதியில் மோதி உயிரிழந்தார்.

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவர் கடந்த 18ஆம் தேதி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார் மயங்கினார். அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் நேற்று(ஜன.19) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மணலூர்பேட்டையில் பலூன் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு/ அரசு உதவிபெறும்/ தனியார் பள்ளிகளில் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான கால அட்டவணை முதன்மை கல்வி அலுவலர் இன்று ஜன 20 வெளியிட்டுள்ளார். அதன்படி ஜனவரி 23- தமிழ், ஜன 27- ஆங்கிலம், ஜன 28- கணிதம், ஜன 29- அறிவியல், ஜன 30- சமூக அறிவியல் தேர்வு நடைபெரும். ஷேர் பண்ணுங்க.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிரக்ருதி என்ற யானையை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தத்தெடுத்துள்ளார். ஆறு மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் கடந்த ஆண்டு ஒரு சிங்கத்தையும், புலியையும் தத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

நாகூர் – ஆழியூர் சாலையில், வைரவனிருப்பு அம்மன் கோவில் அருகே பனைமரத்தில் மைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கீழ்வேளூர் அருகே மெடிக்கல் கடை நடத்தி வந்த விஜயகுமார்(29), சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் பைக் பின்னால் அமர்ந்து சென்ற அண்ணாதுரை(28) என்வர், படுகாயத்துடன் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.