India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி தலைமையில் அக்.31 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தரைதள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. தூய்மை பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து அதன் மீது தீர்வுக்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் என் கல்லூரி கனவு உயர்வுக்கு படி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 18130 மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் உயர் கல்வி சேர்க்கையில் 96.15% சாதனை படைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

சிவகாசி மாநகராட்சியில் தீபாவளி முன்னிட்டு உள்ளூரிலேயே பட்டாசு தயாரிக்கப்படுவதால் மக்கள் அதிக அளவில் பட்டாசுகளை வாங்கி வெடித்தனர். மாநகராட்சியில் சாதாரணமாக ஒரு நாளில் 50 முதல் 52 டன் குப்பையில் துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் கடந்த 2 நாட்களில் சுமார் 140 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அக்25) சனிக்கிழமை அன்று காலை 10 முதல் மாலை 3 மணி வரை டாக்டர் உமையாள் இராமநாதன் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளாம். அனுமதி இவவசம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட இணையதள முகவரிகளில் தங்களின் விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். https://forms.gel/8AKg3uhmWued2mQX6.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (23.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த அக்.09 அன்று மீன்பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று அவர்களிடம் விசாரணை நடத்திய மன்னார் நீதிபதி நவம்பர்.06 தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.23 நாமக்கல்-( தங்கராஜ் – 9498110895) ,வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -( சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் -(செல்வராசு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய செய்யாறு ஆறு காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக செல்லக்கூடிய இந்த ஆறில் 17 ஆயிரம் கன அடி நீர் செல்வதால் இரு கரையோரம் உள்ள சிலாம்பாக்கம், கருவேப்பம்பூண்டி, மெய்யாடும்பாக்கம், திருமுக்கூடல், மலையங்குளம், வயலக்காவூர், மாகரல், இளையனார் வேலூர், கம்பராஜபுரம் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த 2024 -25 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் தேர்ச்சி குறைவாக அளித்த பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமையில் அக்.23ஆம் தேதி அன்று நடைபெற்றது. மேலும் இந்த கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்கான பல்வேறு விதமான அறிவுரைகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (அக்-23) இரவு 11 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.