India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு என பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மங்கலம் காசா எண் 347b உள்ளிட்ட பல்வேறு நிலங்களின் மீது பத்திரப்பதிவுத்துறை பரிவர்த்தனை நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி பலமுறை அரசு நிர்வாகத்திடம் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு பேனர் நேற்று (ஏப்ரல் 4) வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினருடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பலர் இருந்தனர்.

பரமக்குடி தாலுகா காந்தி நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாய கூலி தொழிலாளியான இவர் வாரிசு சான்று வேண்டி இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தார். இது தொடர்பாக எமனேஸ்வரம் விஏஓ பூமிநாதனை அணுகினார். அவரது மனுவை மேலதிகாரிக்கு பரிந்துரைக்க ரூ.2000 லஞ்சம் கேட்டார். இதையடுத்து சந்திரசேகரிடம் ரூ.2000 லஞ்சம் பெற்ற பூமிநாதனை ராமநாதபுரம் ஊழல் தடுப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.

தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் அடுத்த பரசுராம்பட்டியை சேர்ந்தவர் வினோத் (34). இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வளத்தூர் குடியாத்தம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக நேற்று (ஏப்.4) இரவு மானூர் பகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், நெல்லை தொகுதியில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கை சின்னம் வெற்றி பெறும் என பேசினார்.

கோவில்பட்டி விநாயகர் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் துரை(57).இவர் கடந்த 1 ஆம் தேதி எட்டயபுரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இது குறித்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. துரையை கொலை செய்தால் பல கோடி சொத்து தனக்கு கிடைக்கும் என அவரது மருமகன் உதயகுமார் 3 பேருடன் லாரியை ஏற்றி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி திட்ட சாலை 3 ஆவது வடக்கு தெருவில் நாணல் புதரில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேனி விஏஓ ஜீவா சென்று பார்த்தார். டி.ஷர்ட்டும் கைலியும் அணிந்த நிலையில் 70-80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக இருந்துள்ளார். அவர் பற்றிய தகவல்கள் தெரியாததால் தேனி காவல் நிலையத்தில் விஏஓ புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டூரை சேர்ந்த டாக்டர் மாதப்பன் அவரது மனைவி டாக்டர் பத்மினி ஆகியோர் நேற்று காரில் ஈரோடு சென்று விட்டு மீண்டும் மேட்டூர் திரும்பி வந்த போது ஊராட்சி கோட்டை அருகே எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. பலத்த காயமடைந்த அவர்களை பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர்களை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.