Tamilnadu

News August 22, 2025

கோவை: இதை செய்தால் புகார் அளிக்கத் தயங்காதீர்கள்!

image

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வரி வசூலர் சதீஷ்குமார் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதே போல் உங்களிடம் ஏதேனும் அரசு அதிகாரிகள் பணமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் கேட்டல் 0422-2449550 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இந்த முக்கிய எண்ணை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 22, 2025

டிப்ளமோ துணை கலந்தாய்வுக்கு மீண்டும் விண்ணப்பம்

image

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில், பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் https://tnau.ucanapply.com இணையதளத்தின் மூலமாக துணை இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

News August 22, 2025

நாமக்கல் : நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்!

image

நாமக்கல் மாநகராட்சியில் உள்ள வார்டு எண்.38, 39 ஆகிய பகுதிகளில் கொண்டிசெட்டிபட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி, வெங்கரை பேரூராட்சி வார்டு எண் 3.4,8,10,11, 12,14,15 ஆகிய பகுதிகளில் வெங்கரை சமுதாயகூடம், ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி வார்டு எண் 1 முதல் 15 வரை ஆகிய பகுதிகளில் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி , ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாளை (23.08.2025) சனிக்கிழமை நடைபெறுகின்றது.

News August 22, 2025

மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

image

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதி கூட்டுறவு/வங்கிகளை அணுகவும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க.

News August 22, 2025

காஞ்சிபுரம் ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனங்களில் பெயர் மாற்றம் உரிமையாளர் பெயர் மாற்றும், பதிவு போன்றவை இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும். இதற்கான ஆலோசனைக் முகாம் வரும் ஆக.23-ம் தேதி சிப்காட் மாம்பாக்கம் மற்றும் திருமுடிவாக்கத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மாதம்தோறும் வெள்ளிக்கிழமை ஒருமுறை மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறுவது வழக்கமாக வந்தது. மூன்று மாத காலமாக மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறாததால், இன்று(ஆக.22) திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் பெரும் திரளாக முகாமில் கலந்து கொண்டனர்.

News August 22, 2025

தி.மலை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆக.29-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 8th,10th,12th, ITI, பாலிடெக்னிக் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 04175-233381 எண்ணில் அழைக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

செங்கல்பட்டு: பத்திரம் தொலைந்தால்… இதை செய்யுங்க

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். தாலுகா அலுவலகத்திற்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க் மூலம்<<>> விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். இந்த இணையதளம் மூலம் பத்திரம் மட்டுமல்லாமல் நிலம் குறித்த பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் எளிதாக பெறலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News August 22, 2025

திண்டுக்கல்லில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தனியார் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சுய வேலைவாய்ப்பு திட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.

News August 22, 2025

புதுவை: அரசு வங்கியில் வேலை; மாதம் ரூ.48,000 சம்பளம்

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், புதுச்சேரியில் காலியாக உள்ள ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக் செய்து<<>>, வரும் செப்.4-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 – 85,920/- வரை வழங்கப்படும். மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!