India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு தொழில்நுறி வழிகாட்டும் மையத்தில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் நடைபெற்று வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான திட்ட நிரல்படி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை வார நாட்களில் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆக.22) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.62 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 64.90 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.43 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.53 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 556 கன அடி, பெருஞ்சாணிக்கு 154 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
நெல்லை டவுன், நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா
நாளை காலை 6 மணிக்கு சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது கருவூர் சித்தர் சாபம் கொடுத்தது, பின்னர் அவருக்கு காட்சி கொடுத்து சுவாமி சாபவிமோசனம் பெற்ற வரலாற்று தொடர்புடைய திருவிழா ஆகும். அந்த நிகழ்ச்சி பத்தாம் திருநாளான செப்.1ம் தேதி அன்று மானூரில் அதிகாலை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் செய்து வருகிறார்.
முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக C.I.T.U. தொழிற்சங்கத்திற்கும், முந்திரி ஆலை நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டு, கடந்தாண்டு போன்று இந்த ஆண்டும் 20% போனஸ், 2% ஊக்கத்தொகை, 5% விடுப்பு கால ஊதியம் என மொத்தம் 27% போனஸ் வழங்க நிர்வாகத்தினர் முன் வந்தனர் என T.N. முந்திரி பருப்பு C.I.T.U தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிங்காரன் கூறினார்.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் வெளியிட்ட தகவலில், டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. வரும் 24ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று வார ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பதிவு செய்பவர்களுக்கு இடம் தெரிவிக்கப்படும். பயிற்சியுடன் பாடக்குறிப்பு, போட்டித் தேர்வு தொகுப்பும் இலவசமாக வழங்கப்படும்.
சென்னை, பல்லாவரம் மேம்பாலத் தடுப்புகளில் கல்லூரி பேருந்து மோதியதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் தாம்பரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழே மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
என்.சி.எம்.எஸ்.,மேலாண்மை இயக்குனர் முத்துகுமார் கூறுகையில்; மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், தேயிலை தோட்டங்களை பராமரிக்க நல்ல சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது,விவசாயிகளுக்கு, 10க்கும் மேற்பட்ட வகையான உரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2000 டன் உரம் பெறப்பட்டு தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் கூட்டுறவு நிறுவனத்தை அணுகலாம்.
மாணவர்களில் அஞ்சல்தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அஞ்சல் துறை தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா திட்டம் செயல்படுத்துகிறது. இதற்கான போட்டி கோவில்பட்டியில் நடைபெறும் என அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பங்களை செப்.1க்குள் மதுரை தபால் துறைக்கு அனுப்ப வேண்டும். அதிக மதிப்பெண் பெறுவோருக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும்.
திருப்பூர்: மத்திய அரசு, பி.எப்.ல், பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் என்ற புதிய திட்டம் தொடர்பாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) அரங்கில் நேற்று(ஆக.21) நடந்த கருத்தரங்கில், மைதிலி, ‘வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில், பதிவு செய்த நிறுவனங்களில் ஆக.1 முதல் வரும் 2027, ஜூலை 31 வரையிலான காலத்தில் புதிதாக பணியில் சேரும் தொழிலாளருக்கு ஊக்கத்தொகை தரப்படும்’ என்றார்.
தூத்துக்குடி மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப்.9க்குள் உயர்நீதிமன்ற இணையதள பக்கத்தில் <
Sorry, no posts matched your criteria.