India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் திருப்பூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0421-2230123
தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
நெல்லை மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப்.9க்குள் உயர்நீதிமன்ற இணையதள பக்கத்தில் <
திண்டுக்கல் மக்களே.., பஞ்சாப் & சிந்து வங்கி தமிழ்நாடு கிளைகளில் காலியாக உள்ள 85 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க செப்.4ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
ராம்நாடு மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்காக, தமிழக அரசு 7.5% இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த இட ஒதுக்கீடு மருத்துவப் படிப்புகள் உட்பட அனைத்துப் பட்டப் படிப்புகளுக்கும் பொருந்தும். அதன்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் (2021-2025) 7.5% இட ஒதுக்கீடு மூலம் மொத்தம் 1,903 மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு தொழில்நுறி வழிகாட்டும் மையத்தில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் நடைபெற்று வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான திட்ட நிரல்படி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை வார நாட்களில் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆக.22) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.62 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 64.90 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.43 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.53 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 556 கன அடி, பெருஞ்சாணிக்கு 154 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
நெல்லை டவுன், நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா
நாளை காலை 6 மணிக்கு சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது கருவூர் சித்தர் சாபம் கொடுத்தது, பின்னர் அவருக்கு காட்சி கொடுத்து சுவாமி சாபவிமோசனம் பெற்ற வரலாற்று தொடர்புடைய திருவிழா ஆகும். அந்த நிகழ்ச்சி பத்தாம் திருநாளான செப்.1ம் தேதி அன்று மானூரில் அதிகாலை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் செய்து வருகிறார்.
முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக C.I.T.U. தொழிற்சங்கத்திற்கும், முந்திரி ஆலை நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டு, கடந்தாண்டு போன்று இந்த ஆண்டும் 20% போனஸ், 2% ஊக்கத்தொகை, 5% விடுப்பு கால ஊதியம் என மொத்தம் 27% போனஸ் வழங்க நிர்வாகத்தினர் முன் வந்தனர் என T.N. முந்திரி பருப்பு C.I.T.U தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிங்காரன் கூறினார்.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் வெளியிட்ட தகவலில், டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. வரும் 24ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று வார ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பதிவு செய்பவர்களுக்கு இடம் தெரிவிக்கப்படும். பயிற்சியுடன் பாடக்குறிப்பு, போட்டித் தேர்வு தொகுப்பும் இலவசமாக வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.