India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள கரகம்பாக்கம் கிராமத்தில் இன்று அதிகாலை ஆட்டோவில் 2 ஆடுகளை கடத்தி சென்ற 4 பேரை அப்பகுதியினர் மடக்கி பிடித்து ஊத்துக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர்கள் அம்பத்தூரை சேர்ந்த தீபக்குமார், கௌதம், சசிகுமார் மற்றும் ஹரிஹரன் என்பது தெரியவந்தது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2.5 ஆண்டுகளில் பல்வேறு தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் 97,761 பேருக்கு ரூ.68.38 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கட்டுமான தொழிலாளர்கள், உடல் உழைப்பு மற்றும் இதர 16 வகை தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் பிரிவில் 83,553 பேருக்கு கல்விக்காக மட்டும் ரூ.18.68 கோடி வழங்கப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன் காரணமாக ஏதேனும் பணக்கடத்தல் சம்பவம் நடைபெறுகிறதா? என பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 9 லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில் இன்று அதிகாலை, கண்டெயினர் லாரி விபத்தில் சிக்கியது. இதில் ஓட்டுநர் அந்தரத்தில் தொங்கினார். அப்போது, அவருக்கு உதவுவதற்காக சென்னை நோக்கி அரசு பேருந்தில் பயணம் செய்த கோவையை சேர்ந்த முரளி சங்கர் என்ற வாலிபர் இறங்கி சென்று உதவ சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து பேருந்தில் பார்த்தபோது முரளி வைத்திருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தது.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி அரியமங்கலம் அடுத்துள்ள சஞ்சீவி நகர் ஓயாமரி சாலையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கும்பகோணத்திலிருந்து வந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதிலிருந்து ரூ.4 லட்சம் கணக்கில் வராத தொகையை பறிமுதல் செய்தனர். இன்று காலையில் மட்டும் இதுவரை ரூ.6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் பாஜக. காங்கிரஸ் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கோடிக்கணக்கான பணம் கையூட்டு பெறப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்றும், முன்னாள் முதல்வர் நாராயணசாமி மாநிலத்தில் இரிடியம் கடத்தப்படுவதாக கூறியுள்ளார். இது பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து பயணியரின் கோரிக்கைக்கு ஏற்ப, சாந்திநகரில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு, தமிழக அரசு பஸ் சேவை துவங்கி உள்ளது.பெங்களூரில் இருந்து தினமும் இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:00 மணிக்கும், கல்பாக்கத்தில் இருந்து தினமும் இரவு 8:30 மணிக்கு புறப்பட்டு பஸ், மறுநாள் காலை 5:30 மணிக்கு, பெங்களூரு வந்தடைகிறது.
இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தலும், ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டை அடுத்து தேர்தல் நடத்தைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வந்தவாசி அடுத்த சிங்கப்பள்ளி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலன் விவசாயி. குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் பாலன் வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி நிலையில் கிடந்தார். அவர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலன் இறப்பு குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கடலூரில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி கம்பம் இருந்து வந்தன.இதனை அவர்களாகவே எடுத்து கொள்ளும்படி கலெக்டர் அருண் தம்புராஜ் வலியுறுத்தினார். இதனை மீறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் அதனை அகற்றி விடும் என்று கூறினார் இந்த நிலையில் கடலூர் பாரதி சாலையில் உள்ள கொடிக்கம்பங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
Sorry, no posts matched your criteria.