Tamilnadu

News August 16, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் (15.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, மேலே கொடுக்கப்பட்டுள்ள இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ அழைக்கவும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News August 16, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக P. ராமமூர்த்தி
நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி வேலுதேவன், அரூர் வான்மதி, பென்னாகரம் குமரவேல் மற்றும் பாலக்கோடு வீரம்மாள் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்க

News August 16, 2025

காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (15.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

கலால் துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

புதுச்சேரி கலால் துறை அலுவலகத்தில், புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள மதுபான உரிமம் பெற்ற ஓட்டல்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதுச்சேரி கலால் விதிகளில் குறிப்பிட்டுள்ள நேரக்கட்டுப்பாடுகளை, அனைத்து உரிமதாரர்களும் சரியாக கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

News August 16, 2025

தூத்துக்குடியில் சுதந்திர விநாயகர் கோவில்

image

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள போரூரில் உள்ளது தேசிய சுதந்திர செந்தி விநாயகர் கோவில். இந்த ஊரைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி செந்தில் பெருமாள் விநாயக பக்தர் ஆவார். தேசபக்தர் ஆன இவர் அங்கு 1948 ஆம் ஆண்டு இந்த விநாயகர் கோவிலை கட்டினார். தற்பொழுது அவரது வாரிசுகள் இந்த கோவிலை பராமரித்து வருகின்றன. சுதந்திர தினம் குடியரசு தினம் போன்ற நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

News August 16, 2025

ராமநாதபுரம்: நிவாரணம் பெரும் மீனவர்களின் பட்டியல் வெளியீடு

image

இராமநாதபுரம் மாவட்டம் (15.08.2025) பெரியபட்டினம் FRD-87 ஆண்கள் மீனவர் கூட்டுறவு சங்கம் அறிவிப்பு : மீனவ குறைவு கால நிவாரணம் பெறும் புதிய பயனாளிகளாக உள்ள மீனவர்கள் உறுப்பினர் எண் உள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ள ஆண்கள் மீனவ சொசைட்டி அலுவலகத்தில் அல்லது சங்கத் தலைவர் தொடர்பு
தொடர்பு எண்ணில் (99430 94334) அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்

image

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று 79வது சுதந்திர தின விழா நடைப்பெற்றது. இவ்விழாவில், நாகை மாவட்டத்தில் தீயணைப்பு துறை வேளாண்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 172 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பவனந்தி, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News August 16, 2025

சுதந்திர போராட்ட தியாகிக்கு சால்வை அணிவித்து மரியாதை

image

தென்காசி அரசு பள்ளி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இடைகால் பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி காந்தன் பாரதிக்கு அரசு சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இதில் எஸ்.பி அரவிந்த், டிஆர்ஓ ஜெயச்சந்திரன் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News August 16, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், நேற்று, (ஆக.15) இரவு முதல் இன்று (ஆக.16) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.15) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!