Namakkal

News January 1, 2025

பாஜக மாநில துணைத்தலைவரை சந்தித்த நிர்வாகிகள்

image

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் மருத்துவர் கேபி ராமலிங்கத்தை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அவர் இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி, பொதுச் செயலாளர் முத்துக்குமார் மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் லோகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் நேரில் சந்தித்தனர். தொடர்ந்து கட்சியின் தினசரி காலண்டரை அவரிடம் வழங்கினர்.

News January 1, 2025

நாமக்கல் எம்பி புத்தாண்டு வாழ்த்து

image

நாமக்கல் கிழக்கு மாவட்ட எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் இன்று தனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை X பக்கத்தில் மக்களுக்கு தெரிவித்தார். அவர் ஆங்கில புத்தாண்டை அனைவரும் பாதுகாப்பாக விதிமுறைகளை பின்பற்றி கொண்டாடும் படி கூறினார். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றார்.

News January 1, 2025

முன்னாள் அமைச்சருக்கு புத்தாண்டு வாழ்த்து

image

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான அதிமுகவின் நாமக்கல் மாவட்ட செயலாளர் தங்கமணி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து கட்சியினர் சந்தித்தனர். தொடர்ந்து அவருக்கு 2025 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News December 31, 2024

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 31ஆம் தேதி நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 ஆகவே தொடர்ந்து நீடிக்கிறது.

News December 31, 2024

நாமக்கல்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ➤ ராசிபுரத்தில் ரூ.26 லட்சத்திற்கு பருத்தி ஏலம் ➤ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 800 போலீசார் ➤ தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் ➤ ஆட்சியர் தலைமையில் பெண்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கு ➤ எலச்சிபாளையத்தில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் ➤ முத்துகாப்பட்டியில் சணல் பை தயாரிப்பு பயிற்சி

News December 31, 2024

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (31.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல், திருச்செங்கோடு – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), வேலூர் – சங்கீதா (9498210142) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 31, 2024

கிரிக்கெட்டில் ஜொலித்த நாமக்கல் மாணவி 

image

2024-25 ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டிகளில், இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதில் நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரி 2-ஆம் ஆண்டு பி.காம் பாடப்பிரிவு மாணவி எஸ்.ஜி.ஸ்ரீநிதி, தமிழ்நாடு அணியில் 11 பேர் அணிக்குழுவில் இடம் பெற்று, ஆல்ரவுண்டராக ஜொலித்தார். அம்மாணவியை கல்லூரி தலைவர் நல்லுசாமி பாராட்டினார்.

News December 31, 2024

எம்.எல்.ஏ ஈஸ்வரன் தமிழக அரசுக்கு வேண்டுகோள்

image

2025ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் வாழ்த்துக்களை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலையை முழுமையாக கொடுக்க வேண்டும் என்றும், அரசு இதில் விரைந்து நடவடிக்கை வேண்டும் என்று இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.

News December 31, 2024

தாட்கோ மூலம் பயிற்சி: ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக +2 அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வேத விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 31, 2024

நாமக்கல் காவல்துறை ஆன்லைன் மோசடிகளை தடுக்க எச்சரிக்கை

image

உங்கள் நண்பர்களுடைய பெயரில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று வரும் லிங்குகளை கிளிக் செய்யவேண்டாம். உங்களின் மொபைல் ஹேக் செய்ய அதிகமான வாய்ப்பு உள்ளது என்று நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் இன்று ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் விதமாக பொது மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவிப்பு விடுத்தனர். குற்றம் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930லும் www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சலையும் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!