India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (06-03-2025) நிலவரப்படி, முட்டை கொள்முதல் விலை எவ்வித மாற்றமும் இன்றி, ரூ.3.80-ஆக நீடித்து வருகிறது. அதேபோல், கறிக்கோழி விலை ரூ. 107-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 65-ஆகவும் நீடித்து வருகிறது. மாதத் தொடக்கத்தில் ரூ.4.20 ஆக இருந்த முட்டை விலை, தற்போது ரூ.3.80 ஆக விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் குமாரபாளையம் சேலம் பைபாஸ் சாலையில், பிப்ரவரி 28ஆம் தேதி சென்ற வாகனத்தை, சோதனை செய்தனர். அதில் நான்கு டன் ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. போலீசாரின் தொடர் விசாரணையின் அடிப்படையில், கரூர், கோவை ,சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிருபா சங்கர், பார்த்திபன், ராஜேந்திரன், அப்துல் மஜீத், சுருளிராஜன், ராமலிங்கம், பழனிச்சாமி ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (05/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தவமணி (94443736199) ,வேலூர் – சபிதா (9442215201) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள்படி நாமக்கல் மாநகராட்சி எல்லை குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வர்த்தகம் வியாபாரங்கள் தொழிற் சாலைகள் மற்றும் தொழிலகம் ஆகியவற்றிற்காக நாமக்கல் மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமம் பெறவேண்டும். நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பதிநகரில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த மோகன பிரியா மற்றும் அவரது 2 குழந்தைகள் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதையடுத்து, கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான அவரது கணவர் பிரேம்ராஜ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல், நாச்சிபுதூரை சேர்ந்தவர் ஆர்.பி.சுரேஷ் (வயது 50) அதிமுக பிரமுகரான, இவருக்கும் மலைவேப்பங்குட்டையை சேர்ந்தவர் விவசாயி விமல்குமார் என்பவருக்கும் நிலப்பிரச்சனை இருந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு விமல்குமார் அவரது நண்பருடன் இணைந்து
ஆர்.பி.சுரேஷை கொலை செய்துள்ளார். இந்த வழக்க்கில் விமல்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு.
நாமக்கல்: பதி நகரில் பகுதியில் வசித்து வந்த, தனியார் வங்கி ஊழியர் பிரேம் ராஜ் என்பவரது மனைவி மோகனப்பிரியா (33) மகன் மற்றும் மகள் ஆகிய 3 பேர் இன்று சடலமாக மீட்கப்பட்டனர். பிரேம்ராஜ் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். சடலங்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மாயமான வங்கி ஊழியர் எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (04/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – சங்கரபாண்டியன் (9655230300), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695) ,வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பதி நகரில் தாய் மற்றும் இரு குழந்தைகள் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த பிரேம்ராஜ் என்பவரின் மனைவி மோகனபிரியா மற்றும் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல்லில் தொடர்ந்து சரியும் முட்டை விலை கடந்த 5 நாட்களில் ₹1.10 சரிவு. நாமக்கல் பண்ணையில் இன்று முட்டை ஒன்றின் கொள்முதல் விலை ₹3.80 ஆக நிர்ணயம். நாளை காலை இந்த விலை அமலுக்கு வரும் நுகர்வு மற்றும் விற்பனை குறைவால் விலை சரிந்துள்ளதாக நாமக்கல் கோழி பண்ணை உரிமையாளர்கள் தகவல் தெரிவித்தனர் .
Sorry, no posts matched your criteria.