India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் நகர் மையப் பகுதியில், உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, பங்குனி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பஞ்சாமிருதம் ,பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய (18-03-2025) நிலவரப்படி, கறிக்கோழி கிலோ பண்ணை விலை (உயிருடன்) ரூ.106-க்கும், முட்டை கோழி கிலோ (உயிருடன்) ரூ.65-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டை விலையைப் பொறுத்தவரையில், ரூ.3.90 ஆக இருந்த முட்டை விலை நேற்று 10 காசுகள் உயர்ந்து ரூ.4 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் முட்டை விலை 20 காசுகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்விற்கு, வரும் 25-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது
இந்த வகுப்பானாது காலை 10.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டித்தேர்விற்கு தயாராகும் உங்களது நண்பர்களுக்கு இதை ஷேர் செய்யுங்கள்.
பரமத்தி வேலூர் திரெளபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் ஒன்று தமிழரசன் இரு சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் தமிழரசன் மற்றும் எதிரே மோதிய இன்னொரு நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 22-ந் தேதி நடைபெற வேண்டிய உலக தண்ணீர் தின கிராமசபை கூட்டம் நிர்வாக காரணங்களால் 23-ந்தேதி காலை 11மணி அளவில் நடைபெற உள்ளது.இதில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் பற்றியும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்
பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை பாவடி தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). இவர் பாண்டமங்கலம் மின் வாரிய அலுவலகத்தில் கேங் மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு பவித்ரா (27) என்ற மனைவியும், 2 வயதில் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் நேற்று, கார்த்திகேயன் பூசாரிபாளையத்தில் மின் இணைப்பை சரி செய்து கொண்டு இருக்கும் போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (17/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – துர்க்கைசாமி (9498183251), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695) ,வேலூர் – பிரபாவதி (9842735374) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே நேற்று முன்தினம் சரஸ்வதி என்ற 90 வயது மூதாட்டியை கொடூரமாக கொன்ற, அதே பகுதியை சேர்ந்த தாமோதரன், கோகுல்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், குடி மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இருவரும், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் தங்கத் தோடினை பறிக்க முயன்று, வலியால் கத்திய அவரை முகம், மார்பில் கண்மூடித்தனமாக தாக்கி கொன்றது தெரியவந்தது.
நாமக்கல் மாவட்டம் சிறப்பு முகாம் மூலம் 6 மாதம் முதல் 5வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும், தேசிய அளவில் வைட்டமின்-ஏ குறைபாடு தடுப்புமுகாம் வரும் 17ம்தேதி முதல் 22ம்தேதி வரை நடைபெற உள்ளது. அங்கன்வாடி மையங்களில் வைத்து வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படும். மொத்தம் 1,04,113 குழந்தைகளுக்கு வைட்டமின் – ஏ திரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 1,30,956 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.