India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

நாமக்கல் மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.17 நாமக்கல்-(தங்கராஜ்- 9498110895 ) ,வேலூர் -( சுகுமாரன்- 8754002021 ), ராசிபுரம் -( சின்னப்பன்- 9498169092), திம்மநாயக்கன்பட்டி -( ஞானசேகரன்- 9498169073 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.பழனிசாமி மற்றும் மகளிர் அணி இணைச் செயலாளர் ரீத்தா பழனிசாமி ஆகியோர் சந்தித்தனர். இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பின்போது, தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (17.09.2025) இரவு ரோந்துப் பணிக்காகக் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர உதவிக்குத் தத்தம் உட்கோட்ட அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம். ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்ற தொழிலாளி குமாரபாளையத்தில் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பந்தல் மற்றும் அலங்காரம் செய்யும் வேலை செய்வதற்காக நேற்று வந்தார். அப்பொழுது நேற்று இரவு குமாரபாளையம் பிரதான சாலையில் உள்ள மூன்றாவது மாடியில் அவர் தங்கி இருந்த நிலையில், இன்று காலை பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகத்தில் நடைபெற்ற மேரா யுவ பாரத் திட்டத்தின் கீழ் இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் பாண்டமங்கலம் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இன்று புரட்டாசி மாத பிறப்பைமுன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது. காலை முதல் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மைய வளாகத்தில் வரும் செப்.19ல் காலை 10.30 மணி அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. 10, 12, டிப்ளமோ, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். இதில் பங்கேற்க வேலையளிப்போரும், வேலைநாடுநரும் tnprivate jobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 04286222260 எண்ணில் அழைக்கவும்.

நாமக்கல் மக்களே.. மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
▶️கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.
▶️சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100.
▶️வயது வரம்பு: 18-27 வரை.
▶️கடைசி தேதி: செப்டம்பர் 28.
இந்த <
Sorry, no posts matched your criteria.