India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாநகராட்சியில் மாபெரும் புத்தக திருவிழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி சனிக்கிழமை முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த புத்தகத்திருவிழாவில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சென்று படிப்புகளுக்கு எண்ணிலடங்கா புத்தகங்கள் வாங்கி பயன்பெறுமாறு நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொது புத்தகதிருவிழாவிற்கான ஏற்பாடு மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.
ராசிபுரம் ரோட்டரி கிளப் சார்பில் நேற்று ராசி இன்டர்நேஷனல் பள்ளியில் உள்ளரங்கில் விழா நடைபெற்றது. இதில் கால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஆர் டி என். எல். சிவக்குமார் ஏற்பாட்டில் ரோட்டரி திட்டம் மூலம் சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மற்றும் நடிகர் தம்பி ராமையா கலந்து கொண்டார். அவருக்கு ரோட்டரி கிளப் மூலம் நினைவு பரிசளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், வெண்ணந்துார் அருகே உள்ள போதமலை. இயற்கை வளம் நிறைந்த மலைப்பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் விளைவிக்கும் பொருட்களை தலையில் சுமந்து கொண்டே கீழே வந்து விற்பனை செய்து வந்தனர். தார் சாலை வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வைத்தது. இந்நிலையில் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.140 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆந்திராவை போல் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில், ஆண்கள், பெண்கள் என மொத்தம் 294 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்
நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் 24ந் தேதி வெள்ளிக்கிழமை 11 மணிக்கு நாமக்கல் கோட்டத்திற்கு நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் திருச்செங்கோடு கோட்டத்திற்கு பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெற உள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் வல்லரசு தேசிய அளவில் வங்கிப் பணிகளுக்கான தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்த புத்தகத்தை மாணவனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் பாஜக மத்திய அரசு திட்டங்கள் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் லோகேந்திரன், மாவட்டச் செயலாளர் தமிழரசு, ஒன்றிய நிர்வாகி சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்ட அளவில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல் ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாமக்கலில் இருந்து நாளை ஜன.22 (புதன்) முதல் வரும் திங்கள் வரையிலான நாட்களில், காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலிலும், மாலை 5:25 மணிக்கு நாமக்கலில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்ல 20672 பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலிலும் டிக்கெட் இருப்பு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டு விரைவாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (21-01-2025) நிலவரப்படி கறிக்கோழி பண்ணை விலை (உயிருடன்) கிலோ ரூ.98-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.83-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல் முட்டை விலை 480 காசுகளாக நீடித்து வருகிறது. நேற்றைய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விலையில் மாற்றம் செய்யப்படாததால், முட்டை விலை மாற்றம் இன்றி 480 காசுகளாக நீடித்து வருகிறது.
நாமக்கல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 22ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வசந்தபுரம், வேப்பனத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.