India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே, வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம், தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள Office Assistant உள்ளிட்ட 13,217 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் இரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (செப்.21) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

நாமக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக செப்.06 முதல் இலவச டூ வீலர் மெக்கானிக் பயிற்சி நடைபெறுகிறது. இதற்கான முன்பதிவு அக்.05 வரை நடைபெறுகிறது. NCVET மத்திய அரசு சான்றிதழ், வங்கி கடன் ஆலோசனை, MSME சான்றிதழ், மதிய உணவு, தேநீர், பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 96989 96424, 8825908170 எண்ணை அழைக்கலாம். SHARE பண்ணுங்க!

நாமக்கல் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 24ஆம் தேதி வரை, 5 நாட்களுக்கு அதிகபட்ச பகல் நேர வெப்ப நிலை, 30 முதல், 33 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். இரவு நேர குறைந்த பட்ச வெப்பநிலை, 20 முதல் 22 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். இன்று 6 மி.மீ, நாளை 7 மி.மீ., 22ல் 7 மி.மீ., 23ல் 4 மி.மீ., 24ல் 4 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. SHARE IT!

நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கியுடன் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கல்வி கடன் முகாம் எர்ணாபுரம் CMS பொறியியல் கல்லூரியில் இன்று (செப்.20) நடைபெறுகிறது. விண்ணப்பங்களை https://pmvidyalaxmi.co.in/ இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் சமர்ப்பிக்கவும். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கல்லூரிக்கு காலை 9.30 மணிக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மக்களே, SHARE பண்ணுங்க!

நாமக்கல் அரசு ஐடிஐ இல் தொழிற்பிரிவுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பயிற்சி காலத்தில் உதவித்தொகை, பாடப்புத்தகம், சீருடை, பஸ் பாஸ், மிதிவண்டி மற்றும் என்டிசி சான்றிதழ் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பயிற்சி நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் நேரில் அணுகி பயன்பெறுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (19.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.111-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (செப்டம்பர் 19) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.108 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.107 – ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

நாமக்கல் மாவட்டத்திற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் பயணம் மேற்கொள்ள இருந்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம், தொடர் மழை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணம், அடுத்த மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.