India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (26/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), திருச்செங்கோடு – இமயவரம்பன் (94982030141), வேலூர் – சங்கீதா (9498210142) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 76வது குடியரசு தின விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக விளையாட்டு அரங்கில் ஆட்சியர் மருத்துவர் உமா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து குடியரசு தின விழாவில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக வெண்புறாக்களையும் ஆட்சியர் உமா பறக்கவிட்டார்.
76வது குடியரசு தினத்தில் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் மூவர்ண கொடியினை எம்பி ராஜேஷ்குமார் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர்கள் பூபதி (துணை மேயர்), ரணா ஆனந்த், துணை பதிவாளர் மேலாண்மை இயக்குநர் RCMS நாகராஜ், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 16 மையங்களில் தமிழக முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு மாவட்டம் முழுவதும் இருந்து, 4,117 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை 4,042 மாணவ- மாணவிகள் எழுதினர். 75 பேர் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களை மாவட்ட கல்வி அலுவ லர் கற்பகம் ஆய்வு செய்தார். பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் நேற்று 25ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.90 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மழை பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.90 ஆகவே நீடிக்கிறது.
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய (26 -01.2025) காய்கறிகள் விலை நிலவரம்: (கிலோ 1-க்கு) கத்தரி ரூ.20to 25தக்காளி – ரூ.20-24 , வெண்டைக்காய் ரூ.60அவரைக்காய் – ரூ 45-50 -.60, கொத்தவரை ரூ.50, முருங்கை ரூ.120, முள்ளங்கி ரூ.30, புடலங்காய் ரூ.44-48, பாகற்காய் ரூ.58 . பீர்க்கங்காய் ரூ.72, நீர்பூசணி ரூ.20, பரங்கி ரூ.18, தேங்காய் 58என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் கலெக்டர் கலந்து கொண்டு பேசியதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அனைவரும் கட்டாயம் வாக்காளர் அட்டை பெற்று தேர்தல் அன்று தங்களது ஜனநாயக கடமையை மேற்கொள்ள வேண்டும் . வாக்காளர் அட்டை பெற இணைய வழியில் விண்ணபிக்கலாம் என்றார்.
நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளை வே2நியூஸில் பதிவிட்டு, உங்கள் ஊர் செய்திகளை அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (25/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), திருச்செங்கோடு – இமயவரம்பன் (94982030141), வேலூர் – சங்கீதா (9498210142) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
குடியரசு தின விழா 2025நாளை (26.01.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 8.05 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெறும். குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். பின்பு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, தியாகிகளை கௌரவித்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
Sorry, no posts matched your criteria.