India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வளையக்காரனுர் பகுதியில், குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இந்த போட்டியை அமைச்சர் மதிவேந்தன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 600 காளைகளும் 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 39 பேர் காயமடைந்தனர். மேலும் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (01/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – துர்க்கை சாமி (9498183251), திருச்செங்கோடு – மலர்விழி (9498109579), வேலூர் – சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் உள்ளிட்ட 17 சட்டமன்ற தொகுதிகளுக்கு மினி விளையாட்டரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் கோரப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் இச்செய்தியைக் கேட்ட பின்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் தமிழக அரசு பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கும் இளைஞர்களுக்கும் உதவும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நாமக்கல்: ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் நேற்று கல்லூரி மாணவி கடத்தப்பட்டதாக கூறி, அவரது பெற்றோர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மறறும் செல்போன் சிக்னல் உதவியுடன் மடக்கி பிடித்து, மாணவியை கடத்தி திருமணம் செய்த தமிழ்பாண்டியன் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கான வானிலையில் இன்று 12மி.மீ.யும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 10மி.மீ.யும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (31/01/2025) இரவு 10PM-1AM வரை ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), திருச்செங்கோடு – இமயவரம்பன் (94982030141), வேலூர் – சங்கீதா (9498210142) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில், நாளை பிப். 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ளது. தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த புத்தகத் திருவிழா 80க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. தினசரி மாலை தலைசிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10 வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். <
நாமக்கல் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (பிப்.1) தொடங்குகிறது. கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் கோழிநோய் தடுப்பூசி இருவார முகாமாக நடத்தப்படுகிறது. நிகழ் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், இரண்டாம் வார சனிக்கிழமைகளில் பிப்.1 முதல் 14-ஆம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் இன்று (30. 01. 2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வருகின்ற 01.02.2025 முதல் நாமக்கல்லில் நடைபெறவுள்ள மூன்றாவது புத்தகக் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.