Namakkal

News February 10, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி, இன்று (10/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜன் (9498177803), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – ஸ்ரீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News February 10, 2025

நாமக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடல்

image

நாமக்கல் மாவட்டத்தில், நாளை (11.02.2025) செவ்வாய்க்கிழமை அன்று வள்ளலார் நினைவு தினத்தினை முன்னிட்டு, மேற்படி நாளில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் FL 3 உரிம வளாகங்களை மூடப்பட வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

News February 10, 2025

நாமக்கல் புத்தகத் திருவிழா நிறைவு விழா

image

நாமக்கல் மாவட்டம் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா பிப்ரவரி 1 முதல் நடைபெற்று வருகிறது இன்று நிறைவு நாளான நிறைவு விழா இன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறுகிறது. இறுதி நாளான இன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சி மற்றும் என்னால் முடியும் தம்பி தலைப்பில் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் தலைவர் தில்லை சிவக்குமார் சிறப்பாக உரையாற்ற இருக்கிறார்.

News February 10, 2025

நாமக்கல் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

image

குமாரபாளையம் அருகே சாணார் பாளையத்தை சேர்ந்தவர் தனபாலன். நேற்று காலை பக்கத்து வீட்டுகாரர்கள் வீடு திறந்து கிடப்பதாக தனபாலுக்கு தகவல் அளித்தனர். அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 9 பவுன் நகை, பணம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடுகின்றனர்.

News February 9, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி, இன்று (09/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வேதபிறவி (9498167158), ராசிபுரம் – சுகவானம் (9498174815), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News February 9, 2025

கொல்லிமலை கோயிலில் ‘கோழி குத்துதல்’

image

கொல்லிமலை மாசிக் குன்றில், மாசி பெரியசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு, வீடு கட்ட வேண்டும் என்று வேண்டுபவர்கள் தட்டையான கற்களை கொண்டு “கல்” வீடு அமைக்கின்றனர். நோய், பிணி, செய்வினை நீங்க வேண்டும் என்று வேண்டுபவர்கள் ஆட்டுக்கிடாய் வெட்டி வழிபடுகிறார்கள். சிலர் கோயிலின் முன்பாக உள்ள வேல்களில் கோழியை உயிரோடு குத்திவைத்துவிட்டு செல்கின்றனர். இது ‘கோழி குத்துதல்’ என்று அழைக்கப்படுகிறது.

News February 9, 2025

சைக்கிள் மீது கார் மோதியதில் முதியவர் பலி

image

ப.வேலூர் படமுடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி(70), நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதற்காக தனது சைக்கிளில் சேலத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது ப.வேலூர் பிரிவு சாலை அருகே சென்ற போது கார் ஒன்று சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.பரிசோதனையில் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

News February 9, 2025

நாமக்கல் உழவர் சந்தை இன்றைய காய்கள் விலை நிலவரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய (9 -2-2025) காய்கறிகள் விலை நிலவரம்: (கிலோ 1-க்கு) கத்தரி ரூ 35-46, தக்காளி – ரூ.20 – 24, வெண்டைக்காய் ரூ.50 அவரைக்காய் ரூ 50 -.55-60கொத்தவரை ரூ.60 முருங்கை ரூ.130, முள்ளங்கி ரூ.16, புடலங்காய் ரூ.40-44பாகற்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.54, நீர்பூசணி ரூ.25, பரங்கி ரூ.20, தேங்காய் ரூ.60என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

News February 9, 2025

மாமியாரை கொல்ல முயற்சி மருமகள் உட்பட மூவர் கைது

image

திருச்செங்கோட்டில் சொத்துக்காக மாமியாரை கொலை செய்ய திட்டமிட்ட மருமகளை ஊரக போலீசார் கைது செய்தனர். குச்சிபாளையம் பகுதியைச்சேர்ந்த தனலட்சுமி(77) மகன் ஆறுமுகப்பெருமானின் மனைவி தமிழ்ச்செல்வி(41) சொத்தினை அபகரிக்க குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொல்ல முயன்றதால் தமிழ்ச்செல்வி, பாப்பாத்தி,கோமதி கைது செய்யப்பட்டனர்.

News February 8, 2025

இளம்பெண் கொலையில் 4 பேர் கைது

image

திருச்செங்கோடு அடுத்த மொளசியில் கடந்த ஆண்டு, குட்டையில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலத்தை மீட்டு, போலீசார் தொடர் விசாரணை செய்ததில், இறந்தவர் ஈரோட்டை சேர்ந்த சுதா(30) என்பதும் ,சுதாவை அவரது தம்பி மணிகண்டன், மனைவி பவித்ரா, மற்றும் கதீஜா, அசோக்குமார் ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்ததை அடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!