Namakkal

News February 16, 2025

நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் சந்திரசேகரன்

image

டாடா குழுமத்தின் தலைவராக இருந்து வரும் என்.சந்திர சேகரன், இங்கிலாந்து நாட்டின் கௌரவமிக்க விருதான ‘தி மோஸ்ட் எக்சலன்ட் ஆர்டர் ஆப்தி பிரிட்டிஷ் எம்பயர்’ என்ற விருதை பெற்றுள்ளார். இதற்காக இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு, சந்திரசேகர் நன்றி தெரிவித்துள்ளார். டாடா குடும்பத் தலைவர் சந்திரசேகர், நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

News February 16, 2025

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை

image

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கிளிக் செய்யவும். மார்ச்4 கடைசி தேதி.

News February 16, 2025

கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்பு வளாகம்

image

நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் ரூ7.19 கோடி மதிப்பீட்டில் புதியதாக பணியாளர்கள் குடியிருப்பு கட்டும் பணிக்கான தொடக்க விழாவினை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 17 திங்கட்கிழமை 10 மணிக்கு கிரீன் பார்க் பள்ளி அருகில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் நடைபெற உள்ளது.

News February 16, 2025

முன்விரோத மோதல் காரணமாக ஒருவர் கொலை

image

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், கந்தம்பாளையம், செருக்கலை தேவேந்திரர் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. அதே பகுதியை சேர்ந்த வீரமணிக்கும், இருவருக்கும் இருந்த முன்விரோத மோதலில் வீரமணி அண்ணாதுரையை கத்தியால் குத்தியதில் அண்ணாதுரை அவ்விடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 16, 2025

 திருச்செங்கோடு டீக்கடையில் பயங்கர வெடிச்சத்தம்

image

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தின் சாலை திருப்பத்தில் பிரவுன்ஸ் பீயின்ங் என்ற டீக்கடை செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு கடையில் உள்ளே இருந்து பயங்கர வெடிச்சத்தத்தோடு பொருட்கள் சட்டரை உடைத்துக்கொண்டு சாலையில் பறந்து வந்து விழுந்தன. எப்போதும் இக்கடையின் அருகில் பேருந்திற்காக பயணிகள் நிறைய பேர் காத்திருப்பர், இன்று யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

News February 15, 2025

சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழா

image

மாசிக்குண்டம் திருவிழா மாசி 16 பூச்சாட்டுதலுடன் நடைபெற உள்ளது மாசி 27 இல் நடைபெறும் மகா குண்டம் இறங்கும் விழாவில் திருமணம் ஆகாதவர்கள் திருமணம் நடைபெற வேண்டி , குழந்தைப்பேறு கிடைக்காதவர்கள் குழந்தை வரம் வேண்டியும், நோய்நொடிகள் தீரவும் , கடன் தீரவும் நேர்த்தி கடன் செலுத்துவதாக வேண்டி குண்டம் இறங்கினால் அனைத்தும் நிறைவேறும் எனவே தெரியாத மக்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள் மக்களே !

News February 15, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. இன்று முதல் 3 நாட்களுக்கும், 19-ஆம் தேதியும் மணிக்கு 10 கிமீ வேகத்தில் காற்று வீசும்.அதே போல் 18-ஆம் தேதி மணிக்கு 12கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 60.8 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News February 15, 2025

நாமக்கல் மாணவன் தேசிய அளவில் தங்கம்!

image

திருச்செங்கோடு வட்டம் தோக்கவாடி பகுதியில் உள்ள KSR கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பார்த்திபன் புதுதில்லியில் உள்ள கேடி ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 4வது வாகோ இந்தியா கிக் குத்துச்சண்டை ஓபன் சர்வதேச சாம்பியன் ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு கல்லூரி தாளாளர் ஆர்.சீனிவாசன் தனது பாராட்டுதலை தெரிவித்தார்.

News February 15, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (14/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – ஆனந்த குமார் (9498106533), திருச்செங்கோடு – நந்தகுமார் (9498170006), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News February 14, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், நாமக்கல்லில் இன்று 14ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. குளிர் பனி வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.65 ஆகவே நீடிக்கிறது.

error: Content is protected !!