India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க சிறப்பு கடன் வழங்குவது தொடர்பான விளக்கக் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை (பிப்.20) நடைபெறுகிறது. நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் விளக்கக் கூட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் படை வீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் பங்கேற்று பயனடையலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (19/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வேதபிறவி (9498167158), ராசிபுரம் – சங்கரபாண்டியன் (9655230300), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. மாசி மாத புதன்க்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு . காலை 10:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பால் தயிர் மஞ்சள் சந்தனம் எனஅபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றன. பின் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார், இதில் பல்வேறு மாவட்ட பக்தர்கள் ஏராளாமானவர்கள் கலந்து கொண்டு ஆஞ்சிநேயரை வழிபட்டனர்.
நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 01.03.2025 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை பாச்சல் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய (19-2-2025) காய்கறிகள் விலை நிலவரம்: (கிலோ 1-க்கு) கத்தரி ரூ.30 – 36, தக்காளி ரூ.16-18, வெண்டைக்காய் ரூ 36, அவரைக்காய் ரூ.50 – 55 கொத்தவரை ரூ.45, முருங்கை ரூ.90முள்ளங்கி ரூ.20, புடலங்காய் ரூ.22-25, பாகற்காய் ரூ.42, பீர்க்கங்காய் ரூ.44, பூசணிரூ.20, பரங்கி ரூ.16, மாங்காய் ரூ.60தேங்காய் ரூ.60 என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே சப்பையாபுரம் பகுதியில் 7 ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழில் செய்யும் இளைஞர் மீது பெற்றோர் புகார் கொடுத்தனர் . அந்த இளைஞரை உடனடியாக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், நாளை பிப்ரவரி 19-ம் தேதி புதன்கிழமை மின் தடை அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது. இந்நிலையில், மின் நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. வழக்கம் போல் மின்சாரம் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி, இன்று (18/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – கோமளவல்லி (8610270472), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – ராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள இறைவனை இரவில் யாரும் இல்லாத சமயம் பாம்பு வந்து இறைவனை பூஜித்து போவதாக கூறப்படுகிறது. இக்கோயிலுக்கு நாகதோஷம் உள்ளவர்கள் வந்து வழிபட்டால் நாகதோஷம் அகலும் என்று கூறப்படுகிறது. இக்கோயில் சிறப்பினை அறிந்து வழிபடுங்கள் மற்றவர்களும் ஷேர் செய்யுங்கள் மக்களே.
காரப்பேட்டையில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 276 காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8th, Any Degree முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Sorry, no posts matched your criteria.