Namakkal

News March 6, 2025

நாமக்கல் வட்டாரத்தில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்

image

நாமக்கல் வட்டாரத்திற்கு உட்பட்ட வேட்டம்பாடி ஊராட்சி வேட்டம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சிவியம்பாளையம் ஊராட்சி வேணு லட்சுமி மஹால் தாதம்பட்டி மேடு ஆகிய இரு இடங்களில் நாளை (07-03-2025) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் (மூன்றாம் கட்டம்) நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம்.

News March 6, 2025

நாமக்கல்லில் 1500 ஆண்டுகள் பழமையான கோவில்!

image

தமிழகத்தில் ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

News March 6, 2025

நாமக்கல்: வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்பயிற்சி மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5,000 மற்றும் தற்செயலான செலவுகளுக்கு ஒரு முறை மட்டும் ரூ.6,000 வழங்கப்படும். எனவே, தகுதியுள்ளவர்கள் <>-1 <<>>என்ற இணையதளம் மூலம் வரும் மார்ச் 12- க்குள் விண்ணப்பிக்கலாம் . இதை ஷேர் பண்ணுங்க

News March 6, 2025

நாமக்கல் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (06-03-2025) நிலவரப்படி, முட்டை கொள்முதல் விலை எவ்வித மாற்றமும் இன்றி, ரூ.3.80-ஆக நீடித்து வருகிறது. அதேபோல், கறிக்கோழி விலை ரூ. 107-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 65-ஆகவும் நீடித்து வருகிறது. மாதத் தொடக்கத்தில் ரூ.4.20 ஆக இருந்த முட்டை விலை, தற்போது ரூ.3.80 ஆக விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News March 6, 2025

4 டன் வெடிபொருட்கள் பறிமுதலில் 7 பேர் கைது

image

இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் குமாரபாளையம் சேலம் பைபாஸ் சாலையில், பிப்ரவரி 28ஆம் தேதி சென்ற வாகனத்தை, சோதனை செய்தனர். அதில் நான்கு டன் ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. போலீசாரின் தொடர் விசாரணையின் அடிப்படையில், கரூர், கோவை ,சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிருபா சங்கர், பார்த்திபன், ராஜேந்திரன், அப்துல் மஜீத், சுருளிராஜன், ராமலிங்கம், பழனிச்சாமி ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

News March 5, 2025

நாமக்கல் ; இன்றைய இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (05/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தவமணி (94443736199) ,வேலூர் – சபிதா (9442215201) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News March 5, 2025

நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

image

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள்படி நாமக்கல் மாநகராட்சி எல்லை குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வர்த்தகம் வியாபாரங்கள் தொழிற் சாலைகள் மற்றும் தொழிலகம் ஆகியவற்றிற்காக நாமக்கல் மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமம் பெறவேண்டும். நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

News March 5, 2025

தாய், குழந்தைகள் மரணம்: கணவர் தற்கொலை

image

நாமக்கல் மாவட்டம் பதிநகரில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த மோகன பிரியா மற்றும் அவரது 2 குழந்தைகள் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதையடுத்து, கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான அவரது கணவர் பிரேம்ராஜ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 5, 2025

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை

image

நாமக்கல், நாச்சிபுதூரை சேர்ந்தவர் ஆர்.பி.சுரேஷ் (வயது 50) அதிமுக பிரமுகரான, இவருக்கும் மலைவேப்பங்குட்டையை சேர்ந்தவர் விவசாயி விமல்குமார் என்பவருக்கும் நிலப்பிரச்சனை இருந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு விமல்குமார் அவரது நண்பருடன் இணைந்து
ஆர்.பி.சுரேஷை கொலை செய்துள்ளார். இந்த வழக்க்கில் விமல்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு.

News March 4, 2025

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்பு: சிக்கிய கடிதம்

image

நாமக்கல்: பதி நகரில் பகுதியில் வசித்து வந்த, தனியார் வங்கி ஊழியர் பிரேம் ராஜ் என்பவரது மனைவி மோகனப்பிரியா (33) மகன் மற்றும் மகள் ஆகிய 3 பேர் இன்று சடலமாக மீட்கப்பட்டனர். பிரேம்ராஜ் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். சடலங்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மாயமான வங்கி ஊழியர் எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

error: Content is protected !!