India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் இராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குருவட்ட அளவிலான தடகள போட்டிகளை இன்று காலை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்து, விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சங்கர், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மக்களே..,அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா..? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா..? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள்.<
பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையம் பகுதியில் 2022ல் வயதான தம்பதியை கட்டிப்போட்டு 30 லட்சம் ரூபாயை சிலர் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கோபாலகிருஷ்ணன் ஜாமினில் வெளியே வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் கமுதி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பள்ளிப்பாளையம் போலீசார், கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், இன்று(ஆக.6) 10 மி.மீட்டரும், நாளை மறுநாள் (ஆக.8) 3மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (ஆக.7) மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
பெங்களூரூ, நாமக்கல் வழியாக இயக்கப்பட்டு வரும் 07355/07356 ஹூப்ளி – ராமேஸ்வரம் – ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை வரும் ஆக.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ரயில் 5ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கியுள்ளது. நாமக்கலில் இந்த ரயில்கள் புறப்படும் நேரம் சனிக்கிழமை இரவு 8:45 மணிக்கும், திங்கள் அதிகாலை 4:20 மணிக்கு 07356 ராமேஸ்வரம் ஹூப்ளி ரயில் செல்லும் என்பதால் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
நாமக்கல் மக்களே.., நீங்கள் விவசாயம் செய்து வருபவராக இருந்தாலோ, இனி செய்ய முனைவோராக இருந்தாலோ இனி கவலை வேண்டாம். உங்களுக்கான மானியங்கள், சேவைகள், உபகரணங்கள், துறை சார்ந்த சந்தேகங்கள், விவசாயக் கூலிகளுக்கான சேவைகள் என அனைத்தையும் எளிய முறையில் வழங்க<
நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் ராஜமோகன் ( 9442256423), வேலூர் – ரவி ( 9498168482), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498169110), திருச்செங்கோடு – சுப்ராயன் ( 9498169031), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.5 ) மாவட்ட ரோந்து அதிகாரி- விஜயகுமார் ( 9498104763), நாமக்கல் – லட்சுமணதாஸ் ( 9443286911), ராசிபுரம் – சங்கரபாண்டியன் ( 9655230300), திருச்செங்கோடு – முருகேசன் ( 9498133890), வேலூர் – கெங்காதரன் ( 6380673283) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நாளை (06.08.2025) புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: நாமக்கல் என்.கொசவம்பட்டி என்.ஆர்.எல் திருமண மஹால், திருச்செங்கோடு ஆனங்கூர் சூரியம்பாளையம் செங்குந்தர் திருமண மண்டபம், காளப்பநாயக்கன்பட்டி துத்திக்குளம் கலைவாணி திருமண மண்டபம், நாமகிரிப்பேட்டை வட்டாரம் ஆயில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.