India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் விதவையர்கள், படைவீரர்கள் குடும்பத்தை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், நாளை 7ம் தேதி, காலை 10 மணிக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிய உள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், முகாம் நடைபெற உள்ளது. இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இதை ஷேர் செய்யுங்கள்.
நாமக்கல்லில் இன்று முதல், 12 வரை, ஐந்து நாட்களுக்கு பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை, 100.4 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும். மழைக்கான வாய்ப்பு இல்லை. 11ல், 4 மி.மீ., 12ல், 36 மி.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் தெளிவாக காணப்படும். பகல்நேர வெப்பம் அதிகரித்து வருவதால், பண்ணைகளில் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாள துவங்க வேண்டும் என வெப்பம்வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குமாரபாளையம் அருகே சரக்கு லாரியில் 4 டன் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் வழங்கில் தொடர்புடைய கிருஷ்ணகிரி, சேலம் பகுதியை சேர்ந்த ராஜா அண்ணாமலை (47), லிங்கேஸ்வரன் (25), வருண் (33) ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை 8ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை நாமக்கல், கொல்லிமலை, இராசிபுரம், திருச்செங்கோடு, மோகனூர், பரமத்திவேலூர், சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (07/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9498167158), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.3.80 ஆகவே நீடிக்கிறது.
நாமக்கல்லில் தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <
நாமக்கல்லில் இருந்து நாளை,ஞாயிறு,திங்கள் ஆகிய நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலிலும்,மாலை 5:25 மணிக்கு நாமக்கல்லில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்ல 20672 பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலிலும் டிக்கெட்டுகள் வேகமாக நிரம்பி வருகின்றன.தேவைப்படுவோர் முன்கூட்டியே திட்டமிட்டு விரைவாக முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (06/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498167158), ராசிபுரம் – துர்க்கைசாமி (9498183251), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040) ,வேலூர் – கெங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.