India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (09/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – அம்பிகா (9498106533), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695) ,வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நாமக்கல்லில் சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. நாமக்கல் அருகே வளையப்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட 4 கிராமங்களை உள்ளடக்கி 820 ஏக்கர் பரப்பிலான நிலம் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 420 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு என்ற வகையிலும், மீதமுள்ள 400 ஏக்கர் பட்டா நிலங்களாகவும் உள்ளன. இவற்றை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில், நேற்று பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 1156 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட ஐந்து பேரை கைது செய்த போலீசார் மேலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போன் செய்த ஒருவர், “சேந்தமங்கலத்தில் ராஜாராம் என்பவர் நடத்தி வரும் டீக்கடையில் போதைப்பொருட்களை விற்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டதில் போதைப்பொருள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. விசாரணையில் லாரி டிரைவர் குமார் (36) என்பவர் டீயை கடன் கேட்டு உள்ளார். அதற்கு கடைக்காரர் மறுக்கவே போலீஸில் புகார் அளித்தது தெரிந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (08/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜன் (9498177803), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – பொன்குமார் (6374802783) ,வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
ரயிலில் பிஸ்கட் கொடுத்து பயணிகளை ஏமாற்றுவது போல், பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட், மிட்டாய் கொடுத்து கையெழுத்து வாங்கும் பாஜகவின் நடவடிக்கை மிஸ்டு கால் கொடுத்து கட்சியில் சேர வைத்ததைப் போன்றதாகும். நாங்கள் மொழி பெயர்ப்பாளர்களை உருவாக்கவில்லை. திறமையாளர்களை உருவாக்க நினைக்கிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்செங்கோட்டில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
நாமக்கல், பள்ளிப்பாளையம் பேருந்து நிறுத்தப் பகுதியில் திறக்கப்படவுள்ள புதிய தனியார் மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிப்பாளையம் நகராட்சி 5வது, 11வது வார்டு திமுக கவுன்சிலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 11வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் சாந்திக்கு கல் முறிவு ஏற்பட்டுள்ளது. போலீசார் பேருந்தில் ஏற்ற முற்பட்டபோது கால்முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நாமக்கல் திருச்சி சாலையில் அமைந்துள்ள கவிஞர் ராமலிங்கம் பிள்ளை கலைக் கல்லூரியில் இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் மதிவேந்தன் மாவட்ட ஆட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் மார்ச்.14 ஆம் தேதி காலை 11 மணியளவில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கனவு இல்லம் திட்டம், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டம் ஆகியவற்றுக்கு தகுதியான பயனாளிகளை இறுதி செய்வது தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.