India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.05 நாமக்கல்-(தங்கராஜ்- 9498110895) ,வேலூர் -(சுகுமாரன்- 8754002021), ராசிபுரம் -(சின்னப்பன்- 9498169092), குமாரபாளையம் -(செல்வராசு -9994497140 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (05.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல், பெரியமணலி அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு நாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக நாகேஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும் மற்றும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் மந்தநிலை நீங்கும், பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தொழில் செய்யும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு வெளிநாடு சென்று முதுகலைப்படிப்பு படிக்க ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பம் https://bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htmல் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு அக்.31 ஆம் தேதிக்குள் அனுப்ப நாமக்கல் ஆட்சியர் தகவல்.

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் 12 மாதங்களுக்கு புதிதாக பட்டப்படிப்பு முடித்த இளம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடியும் வரை மாதம் ரூ.5000, ஒருமுறை மானியம் ரூ.6000 என மொத்தம் ரூ.66,000 அரசு சார்பில் வழங்கப்படும். இறுதியில் பயிற்சி முடிவடைந்தற்கான சான்றிதழும் அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் இங்கே <

தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தொண்டாற்றி வரும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2025ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பப் படிவம் கிடைக்கும். அதை பூர்த்து செய்து அக்.15ந் தேதிக்குள் அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தகவல்.

உலகப் பொதுமறையான திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவ/மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. 2025-26 ஆண்டிற்கான திருக்குறள் போட்டியில் கலந்துக் கொள்ள விரும்பும் நாமக்கல்லை சேர்ந்த மாணவ/மாணவியர் அக்.31ந் தேதிக்குள் https://tamilvalarchithurai.org/tkm/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர்கள், இங்கு <

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

நாமக்கலில் இருந்து நாளை (திங்கள்) அதிகாலை 4:20 மணிக்கு 07356 ராமேஸ்வரம் – ஹூப்ளி ரயிலில் ஓசூர், பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயனடையலாம்.
Sorry, no posts matched your criteria.