India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம். ஷேர்!

நாமக்கலில் இருந்து நாளை (அக்.07) செவ்வாய் இரவு 8:45 மணியளவில் ஓசூர், பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 06238 இராமநாதபுரம் – மைசூர் ரயிலிலும் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் மக்களே இந்த ரயில்களை முன்பதிவு செய்து பயன்படுத்தி பயனடையுமாறு ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் (அக்.06) காலை 6 மணி பதிவான மழை அளவு விவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி எருமப்பட்டி 25 மிமீ, மோகனூர் 50 மிமீ, நாமக்கல் 5 மிமீ, பரமத்திவேலூர் 2.50 மிமீ, புதுச்சத்திரம் 1 மிமீ, சேந்தமங்கலம் 6 மிமீ, திருச்செங்கோடு 4 மிமீ, ஆட்சியர் அலுவலக வளாகம் 3 மிமீ, கொல்லிமலை செம்மேடு 64 மிமீ என மொத்தம் 160.5 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மக்களே.. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த மணமகளுக்கு ரூ.25,000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் பெற்றோர் தங்கள் மகளுக்கு திருமணம் நடத்தும் பொழுது மிகுந்த உதவியாக அமைகிறது. மேலும் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சனேயா் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய எல்.முருகன், கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் திமுக ஈடுபடுவதாகவும், வரலாற்றுப் பிழையை செய்தவர்கள் என பேசினார்.

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 5) தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் குழுக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் உள்ளிட்ட காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தபோதும், விலையில் எந்த மாற்றமும் இன்றி, பண்ணைக் கொள்முதல் விலை தொடர்ந்து ரூ. 5.05 ஆகவே நீடிக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.05 நாமக்கல்-(தங்கராஜ்- 9498110895) ,வேலூர் -(சுகுமாரன்- 8754002021), ராசிபுரம் -(சின்னப்பன்- 9498169092), குமாரபாளையம் -(செல்வராசு -9994497140 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (05.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல், பெரியமணலி அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு நாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக நாகேஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும் மற்றும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் மந்தநிலை நீங்கும், பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தொழில் செய்யும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு வெளிநாடு சென்று முதுகலைப்படிப்பு படிக்க ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பம் https://bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htmல் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு அக்.31 ஆம் தேதிக்குள் அனுப்ப நாமக்கல் ஆட்சியர் தகவல்.
Sorry, no posts matched your criteria.