Namakkal

News March 15, 2025

மாணவர் கொலை: தலைமை ஆசிரியர் உள்பட இருவர் பணி இடமாற்றம்

image

நாமக்கல், ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 26-ந் தேதி இரு மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் 9-ம் வகுப்பு மாணவர் கவின்ராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவரை, போலீசார் காப்பகத்தில் அடைத்தனர்.இந்தநிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வரதராஜ், செல்லப்பம்பட்டிக்கும், வகுப்பு ஆசிரியர் ராஜேந்திரன், சித்தாளந்தூருக்கும் பணியிடை மாற்றம் செய்துள்ளனர்.

News March 15, 2025

நாமக்கல் கறிக்கோழி விலை சர்ருனு ஏறிடுச்சு!

image

நாமக்கல் மண்டலத்தில் நேற்று முன்தினம் கறிக்கோழி கிலோ ரூ.95க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையை மேலும் ரூ.4 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.99 ஆனது. இந்த நிலையில் நேற்று மீண்டும் 2வது நாளாக ரூ.5 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.104-ஆக உயர்ந்தது.

News March 14, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினம்தோறும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விவரம் வெளியிடப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று (14.03.2025) நாமக்கல் -சாந்தகுமார் (94 981 6 7 680), ராசிபுரம் அம்பிகா (9498106528), திருச்செங்கோடு வெங்கட்ராமன் (9498172040), மற்றும் வேலூர் சபிதா (9442215201) ஆகியோர் இரவு வந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

News March 14, 2025

நம்ம ஊர்! நம்ம கோயில்!

image

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நாவலடி கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் எல்லா நாளுமே சுவாமிக்கு விசேஷ வழிபாடுகள் நடக்கிறது. எனவே, இவருக்கென தனியே விழா எதுவும் கிடையாது. இவரிடம் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் தொடர்ச்சியாக படையல் படைத்து வழிபடுகின்றனர். எனவே, இவருக்கு ‘படையல்சாமி’ என்றொரு பெயரும் உண்டு. இங்கு பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.

News March 14, 2025

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை 

image

உணவு பாதுகாப்புத் துறை சார்பாக பள்ளிப்பாளையம் ஒட்டமெத்தை” ஈக்காட்டூர் பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூன்று கிலோ பறிமுதல் செய்யப்பட்டது .மேலும் காலாவதியான குளிர்பானங்கள் தின்பண்டங்கள் 6 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இரண்டு கடைகளுக்கு தலா ரூபாய் 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News March 14, 2025

பல குரல் நாயகி விருது பெற்ற கல்லூரி மாணவி

image

குமாரபாளையம், எக்ஸல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு வேளாண் பொறியியல் துறை மாணவி‌‌ செல்வி. கீர்த்தனாவிற்கு மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக தேசத்தின் அடையாளம் விருது 2025 – பல குரல் நாயகி விருது கோவையில் வழங்கப்பட்டது. விருதை பெற்ற மாணவிக்கு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

News March 13, 2025

நாமக்கல் ; இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (13/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890) ,வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News March 13, 2025

நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் 13ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம் குமாரபாளையம் 26.40 மி.மீ, மோகனூர் 12 மி.மீ, நாமக்கல் 11.50 மி.மீ, பரமத்தி வேலூர் 10 மி.மீ, ராசிபுரம் 6.20 மி.மீ, சேந்தமங்கலம் 29 மி.மீ, திருச்செங்கோடு 26 மி.மீ, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 17.20 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 19 மி.மீ என நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 157.30 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

News March 13, 2025

நாமக்கல்லில் நாளை சிறப்பு ரயில் இயக்கம்

image

நாமக்கலில் இருந்து நாளை வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:34 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் உள்ளன.

News March 13, 2025

நாமக்கல் நைனாமலை பெருமாளை அறிவீர்களா?

image

கொங்கு நாட்டில் உள்ள வைணவத் தலங்களில் புகழ் பெற்றது நாமக்கல் நைனாமலை வரதராஜ பெருமாள்கோவில். இங்கிருக்கும் பெருமாளை வழிபட்டால், திருப்பதி சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் இங்கு மனமுருகி வேண்டிக்கொண்டால் செல்வம் பெருகும், மன அமைதி மற்றும் நல்ல வாரிசுகள் அமையும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதை மற்ற பக்தர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!