India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல்லில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் வரும் அக்.11ந் தேதி காலை 11 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் (ம) பொது நிதி செலவினம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், 100 நாள் வேலை திட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெரிச்சரிக்கை நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க

தமிழகத்தில் உள்ள இந்து சமயத்தை சேர்ந்த பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை <

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 சிறப்பு அதிகாரி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. B.Tech/B.E, Post Graduate, CA, M.Sc, MBA/PGDM, MCA, போன்ற படிப்புகளில் தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 13ம் தேதிக்குள், <

தி. கோடு செய்யம்பாளையத்தைச் சேர்ந்த தங்கராசு (60), மனைவி கண்ணாயாள் (57) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சாதிக் பாஷா (48) காயமடைந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் : வெண்ணந்துார் நடுப்பட்டி டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருபவர் கிருஷ்ணன்(46). இவர் மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நாமக்கல் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், எஸ்.ஐ செல்லத்துரை தலைமையிலான போலீசார் பாரில் ஆய்வு மேற்கொண்டு கிருஷ்ணன் மற்றும் அங்கு பணியாற்றிய மணிகண்டன் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

நாமக்கல்லில் இன்று அக்டோபர் 7ஆம் தேதி, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ரூ.5.05 ஆகவே நீடிக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் நான்கு சக்கர வாகன இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.07 நாமக்கல்-(தேசிங்கன்- 8668105073) ,வேலூர் -(சுகுமாரன்- 8754002021), ராசிபுரம் -(சின்னப்பன்- 9498169092), குமாரபாளையம் -(செல்வராசு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (07.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய www.sancharsaathi.gov.in இணையதளத்திற்குச் செல்லுங்கள். அங்கு, உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, வரும் OTP-ஐ உள்ளிடவும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் உடனடியாகத் தெரியும். உங்களுக்குத் தெரியாத சிம் கார்டுகள் இருந்தால், உடனே புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.