Namakkal

News March 21, 2025

நாமக்கல் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவுசெய்யப்பட்டு ரூ.70 ஆக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் நேற்று, அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி கிலோ ரூ.104 ஆக குறைந்தது.

News March 21, 2025

மினி பஸ் வழித்தடம் வேண்டி விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 23

image

நாமக்கல் மாவட்டத்தில் மினி பஸ் இயக்குவதற்கான புதிய விரிவான திட்டத்தின் கீழ் புதிய வழித்தடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப் பேருந்துக்கான SCPA விண்ணப்பப் படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து Onlineஇல் கட்டணம் ரூ.1600 செலுத்தி பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் ஆவணங்களுடன் வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் மார்ச் 23ஆம் தேதிக்குள் ஒப்படைக்கலாம்.

News March 20, 2025

பணத்தை இழந்தால் இதை செய்தால் போதும்!

image

நாமக்கல் – மோகனூர் சாலையில் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற சைபர் குற்றம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது ஆன்லைன் டிரேடிங், திட்டங்களில் முதலீடு, டாஸ்க்கை எதிர்கொள்ளுதல் போன்ற வழிகளில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால், உடனடியாக இழந்த பணத்தை நிறுத்தி வைக்க முடியும் என்று தெரிவித்தார்.

News March 20, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (20/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – தவமணி (9443736199) ,வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News March 20, 2025

நாமக்கல்லில் தோஷம் நீக்கும் கோயில்!

image

நாமக்கல், பெரியமணலியில் நாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. நாகம் நேரில் வந்து இங்குள்ள மூலவரை வழிபட்டதால் இத்தல இறைவன் நாகேஸ்வரர் என அழைக்கப்படுவது சிறப்பு. இங்கு வந்து சிவனாரை வழிபட்டுப் பிரார்த்திக்க, நாக தோஷம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், திருமணத் தடை நீங்க, கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டிக் கொள்கின்றனர்.

News March 20, 2025

நாமக்கல் வழியாக ரயிலை இயக்க எம்பி கோரிக்கை

image

நாமக்கல் எம்பி மாதேஸ்வரன், நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது சேலம் – கரூர், கரூர் – திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலை இணைத்து சேலம் – காரைக்கால் தினசரி ரயிலாக இயக்க வேண்டும். அரியலூர்-பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு புதிய ரயில்பாதை அமைக்க இறுதிகட்ட ஆய்வு பணி முடிந்து கிடப்பில் உள்ளது. உடனே இதற்கு நிதி ஒதுக்க நாடாளுமன்றத்தில் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் வலியுறுத்தினார்.

News March 20, 2025

கடந்த ஆண்டு 1,907 சைபர் குற்ற வழக்குகள் பதிவு

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சைபர் குற்றங்கள் தொடர்பாக 1,907 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.14 கோடியே 75 லட்சத்துக்கு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ரூ.3 கோடி அளவிற்கு பணம் பிளாக் செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரூ.85 லட்சம் திரும்ப பெறப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

News March 20, 2025

நாமக்கல் பாஜக நிர்வாகி மறைவு: அண்ணாமலை இரங்கல்

image

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் செல்வமணி, பழனி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என தெரிவித்தார்.

News March 20, 2025

முன்பதிவு இல்லாத ரயில்கள் அறிவிப்பு

image

நாமக்கல் ரயில் நிலையம் வழியாக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சேலம்-நாமக்கல்-கரூர்-திருச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் திருச்சி-கரூர்-நாமக்கல்-சேலம் இடையே முன்பதிவு இல்லாத ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன, அதன் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News March 20, 2025

நாமக்கல்: 2,407 குற்றங்களில் ரூ.14.75 கோடி மோசடி

image

நாமக்கல் மாவட்டத்தில், 15 மாதங்களில், 2,407 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 14.75 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது என நாமக்கல் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் கூறினார். சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. ஆன்லைன் டிரேடிங், திட்டங்களில் முதலீடு, இரட்டை பணம், டாஸ்கை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட வழிகளில் சைபர் குற்றங்கள் அரங்கேறுகின்றன.

error: Content is protected !!