India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (23/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – துர்க்கைசாமி (9498183251), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890) ,வேலூர் – சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல்: பேளுக்குறிச்சியில், பழனியப்பர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் சிலை, வேட்டைக்காரன் வடிவில், தலையின் உச்சியில் முடியை முடிச்சு போட்டுள்ளது. முருகப்பெருமான் வள்ளியை வசீகரித்து திருமணம் செய்ய அழகான வேட்டைக்கார இளைஞனாக வேடமணிந்த தலம் இது. தோல், எலும்பு நோய்கள் குணமாவதற்கும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு கிடைக்கவும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, முருகனை வழிபடுகின்றனர்.
கடந்தாண்டு நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து காணப்பட்டது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது 26ஆம் தேதி வரை 10.07 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் முடிய இயல்பு மழையளவை விட 5.42 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 716.54 மில்லி மீட்டர் இயல்பு மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகம் காணப்பட்டது. இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் 11,827 ஹெக்டரில் பயிர் வகை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 716.54 மில்லி மீட்டர் இயல்பு மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகம் காணப்பட்டது. இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் 86,183 ஹெக்டர் பரப்பளவில் சிறுதானியம் பயிரிடப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இயல்பு மழை 716.54 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகம் காணப்பட்டது. இதனிடையே 2024-25 ஆம் ஆண்டில் ஜனவரி 2025 மாதம் வரை 10,369 ஹெக்டர் நெல் பயிரிடப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கலைச் சேர்ந்தவர் அதிமுக நிர்வாகி காந்தி முருகேசன். இவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை நிர்வகித்து கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு பொறுப்புகளை அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக இலக்கிய அணி இணைச் செயலாளராக காந்தி முருகேசன் அறிவிக்கப்பட்டுள்ளார், அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
நாமக்கல் ஆட்சித் தலைவர் உமா நேற்று மாலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அவசியம் இன்றி காலை 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் தண்ணீர் அதிகம் குடிக்குமாறும் அறிவுறுத்தினார்.
நாமக்கல் மாவட்ட காவலா் பல்பொருள் அங்காடியில் மூன்றில் ஒருவா் என்ற விகிதத்தில் ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் குடும்பத்தில் வேலையில் இல்லாத மனைவி, குடும்ப உறுப்பினா்களை ரூ.15,000 மாத ஊதியத்தில் பணியமா்த்தும் பொருட்டு தகுதி வாய்ந்தோா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். அங்காடியில் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 – 45. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 28.03.2025 மாலை 5 மணி வரை. நாளை (மார்ச் 24) முதல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆயுதப்படை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.