India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே <

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

நாமக்கலில் இருந்து 10-10-2025 (வெள்ளி) சென்னை, காரைக்குடி, பெங்களூரூ, ஹூப்ளி, மைசூரு, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், ஶ்ரீ கங்காநகர் போன்ற பகுதிகளுக்கு செல்ல ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. எனவே, நாமக்கல், திருச்செங்கோடு, மோகனூர், பரமத்திவேலூர், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, வேலகவுண்டம்பட்டி, தொட்டியம், எருமப்பட்டி, மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவும்.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மெட்டாலா, வாழவந்தி, கெட்டிமேடு, வெப்படை, ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (அக்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோனங்கிப்பட்டி, பொன்னேரி, ,அ.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், தூசூர், வெப்படை, வெள்ளிக்குட்டை, சின்னார்பாளையம், மெட்டாலா, ஆயில்பட்டி, கணவாய்பட்டி, கப்பலூத்து, பாதரை, இந்திரா நகர், ரங்கனூர், புதுப்பாளையம், ஆகிய பகுதிகளில் இருக்காது.

நாமக்கலில் இருந்து நாளை (அக்.10) காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் காலை 8:30 மணிக்கு 20,671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

நாமக்கல்லில் நேற்று (அக்.8) தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி, தொடர்ந்து ரூ. 5.05 ஆகவே நீடிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வரும் அக்.12ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர் தேர்வு நடைபெறவுள்ளது. மொத்தம் 30 தேர்வு மையங்களில் 8193 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். தேர்வு மையத்தில் காலை 8.30 முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். 9.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வந்தால் அனுமதி இல்லை என்பதால், உரிய நேரத்தில் வருகை தருமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டு கொண்டுள்ளார்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.08 நாமக்கல்-(தேசிங்கன்- 8668105073) ,வேலூர் -(ரவி- 9498168482), ராசிபுரம் -(சின்னப்பன்- 9498169092), குமாரபாளையம் -(செல்வராஜு -9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (08.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பிரச்சார பயணத்திற்காக அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் விளம்பர பதாகைகள் வைத்து வருகின்றனர். அதேபோல, கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு கட்-அவுட்டுகள் வைத்து வரவேற்புக்கு தயாராகி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.