Namakkal

News October 9, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.09 நாமக்கல்- (தங்கராஜ் -9498110895) ,வேலூர் – (சுகுமாரன் -8754002021), ராசிபுரம் – (சின்னப்பன் : 9498169092), குமாரபாளையம் -(செல்வராசு -9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News October 9, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (09.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 9, 2025

தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேய!ர்

image

நாமக்கல்லில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில், சுவாமிக்கு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தங்க கவச அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

News October 9, 2025

கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட ஈ.பி.எஸ்!

image

நாமக்கல் A.S. பேட்டை பகுதியில் இன்று நடைபெறும் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயண பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சேலம் மாநகரிலிருந்து வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஜெயா பேலஸில் நடைபெற்ற விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

News October 9, 2025

எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு!

image

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயண பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சேலம் மாநகரிலிருந்து கார் மூலம் நாமக்கல் A.S. பேட்டை பகுதிக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை 4:15 மணிக்கு, புதன் சந்தை ஏலூர் பிரிவு ரோடு பகுதியில், புதுச்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

News October 9, 2025

நாமக்கல்: 10-வது போதும்.. அரசு வேலை ரெடி!

image

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் கீழ் தமிழ்நாடு (TN) உரிமைகள் திட்டத்தில் உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 1096 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,000 – ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 14.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News October 9, 2025

நாமக்கல்: எங்கு முகாம் என தெரியுமா?

image

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (அக்.10) நடைபெறும் முகாம்கள்;
1) நாமக்கல் – அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மோகனூர் சாலை.
2)குமாரபாளையம் – ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி குமாரபாளையம்.
3)சீராப்பள்ளி – கொங்கு குலாளர் சமுதாய கூடம் ஓடுவன்குறிச்சி.
4)எலச்சிபாளையம் – கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம் கோக்கலை.
5)எருமப்பட்டி – அரசு மேல்நிலைப்பள்ளி பொட்டிரெட்டிபட்டி.
6)பரமத்தி – சமுதாய நலக்கூடம் எம்.சூரியம்பாளையம்.

News October 9, 2025

நாமக்கல்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849-24299 அழைக்கலாம். சென்னை மக்களே யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

News October 9, 2025

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கை!

image

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு வருகின்ற 10.10.2025 முதல் 26.10.2025 வரை பழைய பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, திருச்சி, துறையூர் செல்லும் பயணிகள் அனைவரும் பழைய பேருந்து நிலையத்தின் உட்புறம் இருந்தே பேருந்துகளில் பயணிக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News October 9, 2025

நாமக்கல்லில் நாட்டுக்கோழி வளர்க்க பயிற்சி!

image

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நாட்டுக் கோழி வளர்க்க இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மேலும், நாட்டுக்கோழி பண்ணை வைக்கவும் அரசு சார்பாக பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!