Namakkal

News August 16, 2025

நாமக்கல்: நிலம் வாங்கும் முன் இதை செய்யுங்க!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. நாமக்கல் மக்களே நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய https://services.ecourts.gov என்ற இணையதளத்திற்கு சென்று நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம்.

News August 15, 2025

நாமக்கல்லில் முட்டை விலை மாற்றம் இல்லை

image

நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) கூட்டம் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், ஒரு முட்டையின் விலை தொடர்ந்து ரூ.4.90 ஆகவே நீடிக்கிறது.

News August 15, 2025

நாமக்கல்: உதவியாளர் வேலை.. ரூ.76,000 சம்பளம்!

image

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 75 உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.10,900 முதல் ரூ.76,380 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News August 15, 2025

நாமக்கல் எஸ்பி-க்கு விருது: எம்.பி வாழ்த்து

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறையின் 24 அலுவலர்களுக்கு இந்திய குடியரசு தலைவரின் தகைசால் பணி மற்றும் மெச்சத்தக்க பணிக்கான விருது பட்டியலில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா சிறந்தசேவையை, பாராட்டி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

News August 15, 2025

சுதந்திர தின காவல் அணிவகுப்பு மரியாதை

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பங்கேற்று மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமாதானத்தை வலியுறுத்தும், விதமாக வெள்ளை புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் இன்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.

News August 15, 2025

நாமக்கல்: அரசு ஐ.டி.ஐ -யில் நேரடிச் சேர்க்கை பெற அவகாசம் நீடிப்பு

image

நாமக்கல் அரசு ஐ.டி.ஐ -யில் நேரடிச் சேர்க்கை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். எனவே அரசு ஐ.டி.ஐ -யில் நேரடி சேர்க்கை பெற 31-08-2025 வரையிலும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ள மாணவர்கள் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகி தொடர்பு கொள்ளலாம்.

News August 15, 2025

நாமக்கல்: B.E/B.Tech படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!

image

நாமக்கல்: நபார்டு வங்கியில் (NABCONS) காலியாக உள்ள 63 Junior Technical Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.1,15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26 தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 15, 2025

BREAKING:தமிழக அளவில் மாஸ் காட்டிய நாமக்கல்!

image

தமிழக அளவில் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், அனைத்து வகையிலும் சிறந்த செயல்பாடுகளுக்காக, நாமக்கல் மாநகராட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்து, சிறந்த மாநகராட்சிக்கான விருதை வென்றது. சென்னையில் இன்று(ஆக.15) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதை வழங்கினார்.நாமக்கல் மக்களே இதனை ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

News August 15, 2025

ரூ.2.50 லட்சம் பரிசு: அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்

image

நாமக்கல் விவசாயிகளே மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மாநில அளவில் சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியை பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு ரூ.2.50 லட்சம் பரிசாக வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதனை விவசாயிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 14, 2025

நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலில் பொது விருந்து

image

நாமக்கல் விளையாட்டு மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார். இதன் தொடர்ச்சியாக அருள்மிகு நரசிம்ம சுவாமி கோவிலில் மதியம் 12.30 மணி அளவில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

error: Content is protected !!