Namakkal

News August 19, 2025

யூரியா உரத்தினை பதுக்கினால் கடுமையான நடவடிக்கை!

image

நாமக்கல் மாவட்டத்தில் யூரியா உரத்தினை பதுக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். உரத்துடன் மற்ற இணை பொருட்களான நுண்சத்துகள், உயிர்ம ஊக்கிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது. மீறினால் உரக் கட்டுப்பாட்டு ஆணை-1985-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி ஆகஸ்ட் 19ஆம் தேதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு காலை 9.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு மாதாந்திர ஆய்வு கூட்டம் 10 மணிக்கு தேர்தல்கள் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதனை அடுத்து நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டுநர் இலவச பயிற்சி மையத்தில் வெற்றி நிச்சயம் திட்டம் குறித்து ஆய்வு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்

News August 18, 2025

கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

குமாரபாளையம் அருகே உள்ள பாலக்கரை பகுதி சேர்ந்த நாகராஜ் விசைத்தறி கூலி தொழிலாளி. தனியார் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள நிலையில் அதிக அளவு கடன் பெற்றதால் நிதி நிறுவனத்தின் கடனை கட்ட அவருக்கு நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மணமுடைந்த அவர் இன்று காலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 18, 2025

நாமக்க:ல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களின் விபரம்!

image

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சியில் உள்ள வார்டு எண்.26, 35 ஆகிய பகுதிகளில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிபாளையம் நகராட்சி வார்டு எண் 8, 9 ஆகிய பகுதிகளில் ஜி வி மகள் திருமண மண்டபம், பட்டணம் பேரூராட்சி வார்டு எண் 1 முதல் 8 வரை ரங்கசாமி திருமண மண்டபத்தில், திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி கே ஆர் மகஹாலில் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாளை (19.08.2025) செவ்வாய்கிழமை நடைபெறுகின்றது.

News August 18, 2025

தங்ககவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சிநேயர்!

image

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சிநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தங்ககவச சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

News August 18, 2025

நாமக்கல்: ரூ.76,380 சம்பளம் அரசு உதவியாளர் வேலை!

image

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 75 உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.10,900 முதல் ரூ.76,380 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News August 18, 2025

நாமக்கல்: எங்கு முகாம்..? ஈஸியா தெரிஞ்சுக்கலாம்!

image

உங்களது பல கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு தரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் உங்கள் பகுதியில் எங்கு நடைபெறுகிறது என தெரியவில்லையா? கவலையே வேண்டாம். இங்கு <>கிளிக் <<>>செய்து நாமக்கல் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தால் போதும். முகாம் எந்த தேதியில், எங்கு நடைபெறுகிறது என்ற முழு விவரமும் கிடைக்கும். மேலும், முகாமில் எந்தெந்த துறைகள் தொடர்பான மனுக்களை வழங்கலாம். என்ன ஆவணங்கள் வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். SHARE பண்ணுங்க மக்களே!

News August 18, 2025

நாமக்கல்: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும்.

News August 17, 2025

கிட்னி விற்பனையை தொடர்ந்து கல்லீரல் விற்பனை

image

பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி விற்பனை நடைபெறுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், இது குறித்து மருத்துவத்துறையினர் விசாரித்து வருகின்றனர் .இந்நிலையில் பள்ளிபாளையம் அலமேடு பகுதியில் உள்ள பெண் தொழிலாளி பேபி என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் 8 லட்ச ரூபாய் பணத்திற்காக தனது கல்லீரலை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News August 17, 2025

நாமக்கல்: பதிவு செய்தால் பணம் கிடைக்கும்!

image

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு 10th தேர்ச்சி பெறாதவர்கள், பெற்றவர்கள், மேல்நிலை வகுப்பு, பட்டதாரிகள், படித்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். தகுதியானோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04286222260 தொடர்பு கொள்ளலாம். யாருக்காவது பயன்தரும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!