India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 2, 2ஏ தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் விவரத்தை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாக (அ) அலுவலகத்தை நேரிலோ அனுகி பதிவு செய்யலாம்.
மதுரை – பெங்களூர் இடையேயான வந்தேபாரத் இரயில் நாமக்கல் இரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நின்று செல்ல வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை மனுவை ரயில் உபயோகிப்பாளர்களின் நாமக்கல் மாவட்ட சங்கத் தலைவர் சுப்பிரமணி நாமக்கல்லில் நேற்று மத்திய இணை அமைச்சர் முருகன் அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் பரிசீலிப்பதாக கூறினார்.
மதுரை – பெங்களூர் இடையேயான வந்தேபாரத் இரயில் நாமக்கல் இரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நின்று செல்ல வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை மனுவை ரயில் உபயோகிப்பாளர்களின் நாமக்கல் மாவட்ட சங்கத் தலைவர் சுப்பிரமணி நாமக்கல்லில் இன்று மத்திய இணை அமைச்சர் முருகன் அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் பரிசீலிப்பதாக கூறினார்.
2வது முறையாக தகவல் ஒலிபரப்பு துறை மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற பின், நாமக்கல் மாவட்டத்திற்கு முதல் முறையாக முருகன் இன்று வருகை புரிந்தார். நாமக்கல்லில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து நாமக்கல் விருந்தினர் மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது செய்தியாளர்கள் அவருடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இன்று பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். அவர் இரண்டாவது முறையாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதற்கு நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 24) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் எம். கோவிந்தராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் மாணவியா் சோ்க்கையின் சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு மே 29-ஆம் தேதி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாவட்டத்தின் சில இடங்களில் மழை லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளது. பகல் வெப்பம் 95, இரவு வெப்பம் 71.6 டிகிரி அளவில் காணப்படும். தென்மேற்கில் இருந்து மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினரும் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ராஜேஸ்குமார் வெளியிட்ட அறிக்கையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாளை காலை 10 மணியளவில் மோகனூர் சாலை முல்லை நகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.மாவட்ட அவைத் தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார்.வனத் துறை அமைச்சர் மதிவேந்தன்,சட்டப் பேரவை உறுப்பினர்கள் ராமலிங்கம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவின் படி, திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு முன் உள்ள பெட்டிக் கடைகளில் காலாவதியான மிட்டாய்கள், குளிர்பானங்கள், போதை மிட்டாய்கள் விற்கப்படுகிறதா என நகர் நல அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் இன்று (ஜூன்.21) திடீர் ஆய்வு செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் கொள்ளையர் ஊராட்சியில் இன்று செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ,கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு தமிழக அரசின் பல்வேறு சாதனைகள் குறித்த, புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
Sorry, no posts matched your criteria.