India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாதந்திர மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (அக்.15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம் புதூர், துத்திக்குளம், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. SHARE பண்ணுங்க!

நாமக்கல் மண்டலத்தில் இன்று (14-10-2025) காலை நிலவரப்படி கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோ (உயிருடன்) ரூ.95-ஆகவும், முட்டை கோழி கொள்முதல் விலை ரூ.120 ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நீடித்து வருகின்றது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக முட்டை கொள்முதல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

நாமக்கல்: பெங்களூரூ, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சாஃபர் ரயிலில் வருகிற அக்.31ம் தேதி வரை கூடுதலாக ஒரு 3 tier AC பெட்டி இணைத்து இயக்கப்படவுள்ளது. இந்த 22497 திருச்சி ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக நாளை (அக்.15) புதன் இரவு 07:45க்கு செல்லும். பயணிகள் பயன்படுத்திக்கொள்ளவும்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமை நடக்–கிறது. அதன்படி இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வருகிற அக்.17-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் பல்வேறு தனியார் துறையினர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 04286-222260 தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்ட ஆஞ்சநேயர் கோவிலில் மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் என தகவல் வந்ததின் பேரில் நேற்று (அக்.13) மாலை 6.30 மணிக்கு BBDS SSI அருணாச்சலம், SSI கோபி, BBDS Dog டயானா, HC வேல்முருகன், HC சௌந்தர்ராஜன், HC ரமேஷ் ஆகியோர் ஆஞ்சநேயர் கோவில் முழுவதும் சோதனை செய்தனர். இதனால் ஆஞ்சநேயர் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி மேயர் அறையை திறப்பு விழா நடைபெற்றது. இதில் எம்பி ராஜேஷ்குமார் கலந்து கொண்டு இன்று திறந்து வைத்தார். நிகழ்வில் மாநகராட்சி மேயர் கலாநிதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் உடன் நகர கழக செயலாளர்கள் செ.பூபதி (துணை மேயர்), செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக்டோபர் 13) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 14) முதல் முட்டையின் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (13.10.2025) இரவு ரோந்துப் பணிக்கான அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 94981 81216, அவசர உதவி எண்: 100. மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக திரு. சங்கிலி (94982 10142) நியமிக்கப்பட்டுள்ளார். உட்கோட்ட பகுதிகளுக்கான அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் என தகவல் வந்ததின் பேரில் இன்று (அக்.13) மதியம் 12.40 மணிக்கு BBDS SSI அருணாச்சலம், SSI கோபி, BBDS Dog டயானா, HC வேல்முருகன், HC சௌந்தர்ராஜன், HC ரமேஷ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மக்களே.., அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.