India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதை ஒட்டி பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், ஆண்டலூர், கேட்டு புதுசத்திரம் புதன் சந்தை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பரமத்தி சாலை ஆகிய பகுதிகளில் விளம்பர பலூன்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடைவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி விளம்பர பலூன்கள் மற்றும் ட்ரோன் கேமரா பறந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாமக்கல் மாநகராட்சி பகுதிக்கு இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் சிலை திறப்பு விழா, பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக நாமக்கல் நகரப் பகுதி முழுவதும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாமக்கல், பள்ளிபாளையம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று மட்டும் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கடந்த 2 நாட்களாக, மாலை நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வந்த நிலையில், காலை 6 மணி அளவில் அதிகமாக மழை பெய்ய தொடங்கியது.
நாமக்கல் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார். நாமக்கல்- பரமத்தி சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்த பின், ரூ.810.28 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, முடிவுற்ற கட்டடங்களை திறந்து வைக்கிறார். மேலும் 16 ஆயிரம் பயனாளிகளுக்கு திட்ட உதவிகளை வழங்குகிறார்.
ஐப்பசி மாதம் பிறந்துள்ள நிலையில் நாமக்கல் தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.10 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிர் உள்ளிட்ட காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்ததாக தெரிகிறது. இதனால் 5 காசுகள் விலை உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.10 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பொம்மகுட்டைமேடு பகுதியில் புதிதாக அமைய உள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை நாளை தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அதனை முன்னிட்டு இன்று அமைச்சர் பதிவேந்தன்,எம்பி ராஜேஷ் குமார் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு மேற்கொண்டனர். நாளை திறப்பு விழா காண உள்ள புதிய பேருந்து நிலையம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளை நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து அரசு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கயிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நலத்திட்டம் வழங்கும் இடத்தினை இன்று அமைச்சர் மதிவேந்தன், எம் பி ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று நேரில் சென்று முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க..
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை ரூ.810.28 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக இந்த தகவல் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அக்.22ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வர உள்ளார். இதனால் பாதுகாப்பு கருதி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் 21ஆம் தேதி பிற்பகல் முதல் 22ஆம் தேதி இரவு வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.