India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்செங்கோடு மாசிக்குண்டம் திருவிழா மாசி 16 பூச்சாட்டுதலுடன் நடைபெற உள்ளது. மாசி 27 இல் நடைபெறும் மகா குண்டம் இறங்கும் விழாவில் திருமணம் ஆகாதவர்கள் திருமணம் நடைபெற வேண்டி , குழந்தைப்பேறு கிடைக்காதவர்கள் குழந்தை வரம் வேண்டியும், நோய்நொடிகள் தீரவும் , கடன் தீரவும் நேர்த்தி கடன் செலுத்துவதாக வேண்டி குண்டம் இறங்கினால் அனைத்தும் நிறைவேறும் எனவே தெரியாத மக்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள் மக்களே

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. தமிழ் மாத மாசி முதல் திங்கள்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. காலை 10:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பால் உள்ளிட்டஅபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றன பின்தங்ககவச அலங்காரத்தில் காட்சி தந்தார். இதில் பல்வேறு மாவட்ட பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஆஞ்சிநேயரை வழிபட்டனர்.

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

நாமக்கல் அடுத்த தூசூர் சேர்ந்த மூதாட்டி காமாட்சி ( 65). இவர் அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர் அவரை மாட்டு கொட்டகைக்கு இழுத்து சென்று 5பவுன் தங்க சங்கிலியை பறித்து ஓடியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த ஒரு டீக்கடையில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென மர்ம பொருள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை செய்ததில், கடையில் இருந்த கேஸ் சிலிண்டரின் லப்பர் குழாயில் ஏற்பட்ட கசிவின் மூலமாக கேஸ் வெளியேறி, கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்சார கசிவு மூலமாக வெடி விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (16/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – சுகவனம் (9498174815), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

டாடா குழுமத்தின் தலைவராக இருந்து வரும் என்.சந்திர சேகரன், இங்கிலாந்து நாட்டின் கௌரவமிக்க விருதான ‘தி மோஸ்ட் எக்சலன்ட் ஆர்டர் ஆப்தி பிரிட்டிஷ் எம்பயர்’ என்ற விருதை பெற்றுள்ளார். இதற்காக இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு, சந்திரசேகர் நன்றி தெரிவித்துள்ளார். டாடா குடும்பத் தலைவர் சந்திரசேகர், நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கிளிக் செய்யவும். மார்ச்4 கடைசி தேதி.

நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் ரூ7.19 கோடி மதிப்பீட்டில் புதியதாக பணியாளர்கள் குடியிருப்பு கட்டும் பணிக்கான தொடக்க விழாவினை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 17 திங்கட்கிழமை 10 மணிக்கு கிரீன் பார்க் பள்ளி அருகில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், கந்தம்பாளையம், செருக்கலை தேவேந்திரர் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. அதே பகுதியை சேர்ந்த வீரமணிக்கும், இருவருக்கும் இருந்த முன்விரோத மோதலில் வீரமணி அண்ணாதுரையை கத்தியால் குத்தியதில் அண்ணாதுரை அவ்விடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.