India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர்-23 (இன்று) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!
நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மல்லசமுத்திரம், புதுசத்திரம், ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் முக்கிய தோட்டக்கலை பயிரான சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், ரபி சிறப்பு பருவத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய, வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று காலை வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வருகின்ற 25ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாமக்கல் மாவட்டம் ‘புதுமைப் பெண்’ திட்டம் மூலமாக கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை பெறுவதில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலமாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை பெறுவதில் 2ஆவது இடம் பிடித்துள்ளதாக தெரிவித்தார்.
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 25ஆம் தேதி காலை 10 மணிக்கு உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள அனைவரும் வேளாண்மை அறிவியல் நிலையத்தை நேரில் தொடர்பு கொண்டு, வருகிற 24ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
ஐப்பசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.15 என்று அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது மழையின் காரணமாக ஏற்பட்ட குளிரினால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது இதன் காரணமாக நாமக்கல்லில் 5 காசுகள் முட்டை விலை உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணையின் கொள்முதல் விலை ரூ5.15 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிக்காக இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை புரிந்தார். அப்போது, கடந்த சில தினங்களுக்கு முன் ஏடிஎம் வடமாநில கொள்ளையர்களை குமாரபாளையத்தில் வளைத்து பிடித்த நாமக்கல் மாவட்ட காவல்துறையினரை தமிழக முதல்வர் சந்தித்து பாராட்டி கௌரவித்தார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நாமக்கல்லில் பொம்மைகுட்டைமேட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், புதிய சட்டக்கல்லூரிகளுக்கான கட்டடங்கள் போன்றவற்றை திறந்து வைத்தார். 369.65 கோடி மதிப்பிலான 140 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் அமைச்சர்கள், எம்.பிகள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சற்றுமுன் நாமக்கல் வந்தடைந்தார். பரமத்தி சாலையில் உள்ள செலம்ப கவுண்டர் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நாமக்கல் நகருக்குள் பேருந்துகள் மற்றும் லாரிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகள் நாமக்கல் வழியாக வந்து பரமத்தி சாலை மற்றும் திருச்சி சாலை வழியாக செல்ல வேண்டும் எனவும், துறையூர் செல்லும் வாகனங்கள் கொசவம்பட்டி பகுதியில் கரூர் செல்லும் வாகனங்கள் வள்ளிபுரம் நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.