Namakkal

News August 16, 2024

நாமக்கல் மாவட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்

image

நாமக்கல் மாவட்டத்தில், வட்டார வள பயிற்றுநர் குழுவில் இடம் பெற தகுதியான சுய உதவிக்குழு உறுப்பினர்கள் (பெண்கள்) விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் கலெக்டர் ச.உமா அழைப்பு விடுத்துள்ளார். மேலும் கூடுதல் தகவல்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் கூடுதல் தகவல் பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

நாமக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழையால் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே மோகனூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது . இந்த நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 16, 2024

நாமக்கல்லில் செப்-14 ல் மக்கள் நீதிமன்றம்

image

நாமக்கல்லில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திருச்செங்கோடு, இராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெறகிறது. எனவே மக்கள் பயன்பெற நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் குருமூர்த்தி அழைப்பு விடுத்துள்ளனர்.

News August 16, 2024

திருசெங்கோட்டில் ரிக் வண்டி கண்காட்சி

image

திருசெங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கமும், திருசெங்கோடு ரிக் என்ஜினீயரீங் மற்றும் சர்வீஸ் செண்டர் சங்கமும் இணைந்து அகில இந்திய அளவிலான போர்வெல் ரிக் வண்டி கண்காட்சியை நடத்துகின்றனர். இன்று காலை 10 மணிக்கு திருசெங்கோடு ஆனங்கூர் ரோட்டில் உள்ள கே.ஆர்.மஹாலில் தொடங்குகிறது. இதில் திருசெங்கோடு எம்.எல்.ஏ ஈஸ்வரன் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சி இன்று முதல் வரும் 3நாட்கள் வரை நடைபெறுகிறது.

News August 16, 2024

நாமக்கல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க.

News August 14, 2024

கிராம சபைக் கூட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா? (1/6)

image

நாமக்கல்லில் உள்ள பஞ்சாயத்துகளில் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

image

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

image

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!