India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல்: பதி நகரில் பகுதியில் வசித்து வந்த, தனியார் வங்கி ஊழியர் பிரேம் ராஜ் என்பவரது மனைவி மோகனப்பிரியா (33) மகன் மற்றும் மகள் ஆகிய 3 பேர் இன்று சடலமாக மீட்கப்பட்டனர். பிரேம்ராஜ் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். சடலங்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மாயமான வங்கி ஊழியர் எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (04/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – சங்கரபாண்டியன் (9655230300), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695) ,வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பதி நகரில் தாய் மற்றும் இரு குழந்தைகள் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த பிரேம்ராஜ் என்பவரின் மனைவி மோகனபிரியா மற்றும் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல்லில் தொடர்ந்து சரியும் முட்டை விலை கடந்த 5 நாட்களில் ₹1.10 சரிவு. நாமக்கல் பண்ணையில் இன்று முட்டை ஒன்றின் கொள்முதல் விலை ₹3.80 ஆக நிர்ணயம். நாளை காலை இந்த விலை அமலுக்கு வரும் நுகர்வு மற்றும் விற்பனை குறைவால் விலை சரிந்துள்ளதாக நாமக்கல் கோழி பண்ணை உரிமையாளர்கள் தகவல் தெரிவித்தனர் .

கொல்லிமலை ஆலவாடிப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், விவசாயி. இவர் அங்குள்ள ஓலையார் வழியாக பைக்கில் செல்லும்போது, அவரது பைக் வளைவில் எதிர்பாராதவிதமாக மற்றொரு பைக் மீது மோதிக்கொண்டது. இதில் படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தார். எதிரே வந்த ஜீவா என்பவர் காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (3/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200) ,வேலூர் – பிரபாவதி (9842735374) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் 38,013 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை – உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை கட்டணமுமின்றி மார்ச்31க்குள்பதிவு செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தெரிவித்துள்ளார்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்! நீங்கள் கடினமாக உழைத்தீர்கள், இப்போது நீங்கள் பிரகாசிக்க வேண்டிய நேரம் இது, உன்மீது நம்பிக்கை கொள், கவனம் செலுத்துங்கள், நினைவில் கொள்ளுங்கள், உங்களிடம் இது கிடைத்துவிட்டது!உங்கள் தேர்வுகள், அதற்குப் பிறகும் வெற்றி பெறவும் நல்வாழ்த்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாமக்கல்லில் மட்டும் 73 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.10,000 முதல் 29ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசிநாளாகும். விண்ணப்பிக்க இங்கே <

நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கும் பிளஸ் 2 தேர்வினை 18461 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்வு பணியை கண்காணிக்க 86 முதன்மை கண்காணிப்பாளர்கள், 86 துறை அலுவலர்கள், நான்கு கூடுதல் துறை அலுவலர்கள், 200 பறக்கும் படை விழிப்புணர்வு வழித்தட அலுவலர்கள்,24 பேர் வினாத்தாள் கட்டுப்பாட்டாளர்கள் 3 பேர் மற்றும் அரை கண்காணிப்பாளர் 1,260 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.குழுக்கள் முறைப்படி பணி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.