Namakkal

News January 21, 2026

நாமக்கல்லில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

நாமக்கல் மாவட்டம், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆனது 23/1/2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த முகாமில் வேலைவாய்ப்பு வேண்டுவோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க!

News January 21, 2026

நாமக்கல்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News January 21, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு (ஜனவரி 26) கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் தூய்மை பாரதம், ஜல் ஜீவன், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஏரிகள் புதுப்பித்தல் உள்ளிட்ட 12 முக்கிய தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் கூட்டத்தில் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அழைப்பு!

News January 21, 2026

குமாரபாளையத்தில் பள்ளி மாணவன் விபரீத முடிவு!

image

குமாரபாளையத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் தீபேஷ் (17), படிப்புச் சுமையால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் கதவை உடைத்து மீட்ட பெற்றோர், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 21, 2026

நாமக்கல் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

News January 20, 2026

நாமக்கல்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

image

நாமக்கல் மக்களே உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவிறக்கம் செய்யுங்கள்.அந்த படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 20, 2026

நாமக்கல்: லஞ்சம் கேட்டாங்களா? இத பண்ணுங்க!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News January 20, 2026

நாமக்கல்: முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.2 சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.82-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.80 ஆக குறைந்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ. 5.00 ஆகவும், கறிக்கோழியின் விலை கிலோ ரூ.152 ஆகவும் நீடித்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News January 20, 2026

நாமக்கல்: 12-ம் வகுப்பு போதும்.. ஆதார் துறையில் வேலை!

image

நாமக்கல் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய +2 படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து தங்கள் மாநிலத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க!

News January 20, 2026

நாமக்கல்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நாமக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04286-299855, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!