Namakkal

News September 4, 2024

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தண்ணிர்

image

கொல்லிமலை பகுதியில் அமைந்துள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீர் வரும் காரணத்தால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் அனுப்பி வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் தகுந்த பாதுகாப்புடன் குளிக்க வேண்டும் எனவும், மது அருந்திவிட்டு செல்வோரை வனத்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். மேலும் தொடர் மழை காரணமாக அருவியில் நீர் வரத்து மிகவும் அதிகரித்து வருகிறது.

News September 4, 2024

தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று மாலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்திரத்தில் அமைந்துள்ள மகேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 21ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளதாகவும் இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்த அனைவருக்கும் இந்த வேலை முகாமில் கலந்து கொள்ளலாம் . தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

News September 3, 2024

நாமக்கல்லில் மின்வாரிய குறைதீர்க்கும் முகாம்

image

நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில், மாதந்தோறும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில், கோட்ட அலுவலகங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு, மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவர்களின் குறைகள் நேரடியாக கேட்டு, தீர்வு காணப்படுகிறது. இந்த செப்டம்பர் மாதத்திற்கான மின் நுகர்வோர் கூட்டம் நாளை 4ம் தேதி, முதல் புதன்கிழமை காலை நடைபெறுகிறது.

News September 3, 2024

நாமக்கல் கலெக்டர் அறிவுரை

image

நாமக்கல்லில் பள்ளி ஒருங்கிணைப்பாளர்க்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் உமா பேசுகையில் தற்போதைய காலத்தில், பெரும்பாலான குடும்பங்களில் ஒற்றை குழந்தைகளை அதிக செல்லம் கொடுத்து, குழந்தைகள் கேட்பதை உடனடியாக வாங்கி கொடுத்து, பணத்தின் அருமையை உணராத விதமாக வளர்த்து வருகின்றனர் என்று கலந்து கொண்டவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

News September 3, 2024

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்?

image

நாமக்கல் மாவட்டத்தில் Way2News நிருபராக மாற விருப்பமும், ஆர்வமும் உள்ளதா? உங்கள் பகுதிகளில் பகுதிகளில் நடக்கும் தினசரி நிகழ்வுகளை செய்திகளாக பதிவிட்டு கூடுதல் வருவாய் ஈட்டுங்கள். நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்திக்கும் உரிய ரூபாய் வழங்கப்படும். உங்கள் ஊரின் நிருபராக மாறுங்கள் கூடுதல் வருவாய் ஈட்டுங்கள்! இப்போதே நிருபராக பதிவு செய்யவும். தொடர்புக்கு 91603 22122

News September 3, 2024

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்

image

நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஆகும். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு காலையில் சிறப்பு அபிஷேகமான வாசனை திரவியம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து சாமிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. நாமக்கல் சுற்றுவட்டார பகுதி சேலம், கரூர் ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

News September 3, 2024

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நாளில் 616 மனு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவித் தொகை, வங்கி கடன், அடிப்படை வசதி உள்ளிட்டவற்றிற்காக ஒரே நாளில் 616 பேர் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர், உரிய துறைக்கு அனுப்பி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

News September 3, 2024

நாமக்கல்லில் இன்றைய காய்கறி விலை விபரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய விலை விபரம்: தக்காளி ரூ.18, வெண்டை ரூ.20, அவரை ரூ.65, கொத்தவரை ரூ.28, முருங்கை ரூ.40, முள்ளங்கி ரூ.30, புடல் ரூ.20, பாகல் ரூ.40, பீர்க்கன் ரூ.36. இதனிடையே நேற்று 2ம் தேதி ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 3ம் தேதி ஒரு கிலோவிற்கு ரூ.5 விலை குறைந்து ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News September 3, 2024

நாமக்கல்: குழந்தையை கொன்ற 2 பெண்கள் கைது

image

சேந்தமங்கலம் அருகே காந்திபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் முத்தையா – சினேகா. இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை இருந்தது. இதனிடையே சினேகா மற்றொரு ஆணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தகாத உறவுக்கு இடையூறாக இருந்த தனது குழந்தையை அவர் கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். இதையடுத்து சினேகாவையும், இதற்கு உறுதுணையாக இருந்த அவரது உறவினர் கோகிலாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

News September 2, 2024

பனை விதை நட ஆட்சியர் அழைப்பு

image

காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியில் பங்கேற்க தன்னார்வலர்களுக்கு நாமக்கல் ஆட்சியர் உமா அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இதில், பங்கேற்க இருக்கும் மாணவ, மாணவியர்கள், சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், சமூக வலைதள பிரபலங்கள் udhavi.app/panai என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறும் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!