India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு துறையின் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகின்ற 27-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம், நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் அதிமுக சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசுகையில், அதிமுக-விற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதிமுக-வை அழிக்க பலர் பல வழிகளில் வழக்கு தொடுத்தனர். அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கி அதிமுக -வை, இபிஎஸ் கட்டி காத்துள்ளார். திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தது.
நாமக்கல் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்ற கள ஆய்வுக் கூட்டம், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமையில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, அதிமுகவின் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் பங்கேற்றுப் பேசினார். இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நாளை (20.11.24) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மல்லூர் துணை மின் நிலையம், ராசிபுரம் துணை மின் நிலையத்தில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின்நிலையத்தின் கீழ் உள்ள ஊர்களில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2024-2025 ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம். டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்குவதற்கான விண்ணப்பத்தை நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் 23/11/2024 அன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தெரிவித்துள்ளார்.
1.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
2.ராசிபுரம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் போலீசார் விசாரணை
3.தங்க கவசத்தில் காட்சி தந்த ஆஞ்சநேயர்
4.தத்தகிரி முருகன் ஆலயத்தில் 108 சங்க அபிஷேகம்
5.நாமக்கல் மாவட்டத்தில் 15.10 மிமீ மழை பதிவு
நாமக்கல் மாநகராட்சி முழுவதும் பல்வேறு இடங்களில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நாளை மதுரை வீரன் புதூர், லக்கம்பாளையம் பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் நாளை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல் மாநகராட்சி சார்பாக தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 489 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா விடம் பொதுமக்கள் வழங்கினர். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் உமா நடவடிக்கைகளுக்கு பரிந்துரைத்தார்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் கோனேரிப்பட்டி ஏரியில் இன்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் எரிந்த நிலையில் சடலமாக காவல்துறையினரால் காணப்பட்டது. இந்த சம்பவ நடைபெற்ற இடத்தில் இராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், காவல் ஆய்வாளர் சுகுவனம், உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத திங்கள்க்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர்சிறப்பு அலங்காரம் பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
Sorry, no posts matched your criteria.