Namakkal

News September 5, 2024

விபத்தில் சிக்கிய நபர்: உதவிய நாமக்கல் எம்பி

image

சேலத்திலிருந்து நாமக்கல் நோக்கி வந்த அரசு பேருந்து முதலைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்ற பொழுது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பேருந்தின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானர். அப்போது, ராசிபுரம் சென்று விட்டு அவ்வழியாக வந்த நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், உடனடியாக இறங்கி உதவி செய்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

News September 5, 2024

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த மூன்று நாட்களாக 4.70 காசாக இருந்து வந்தது. இந்நிலையில், என்இசிசி நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் முட்டை விலையில் நேற்று மாற்றம் செய்தார். அப்போது 10 காசுகள் உயர்த்தி, ஒரு முட்டை கொள்முதல் விலை ரூ.4.80 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களின் முட்டை விலை உயர்ந்துள்ளதால், அதனை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

News September 5, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 9 ஆசிரியர்களுக்கு விருது

image

முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை முன்னிட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வி பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது. அந்தகவையில், நாமக்கல் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 4 பேர், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 4 பேர், தனியார் பள்ளியில் ஒருவர் என மொத்தம் 9 பேர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

News September 5, 2024

நாமக்கல்: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

image

நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இ-ஷ்ரம் (e-Shram Portal)-ல் பதிவு செய்து குடும்ப அட்டை இல்லாதவர்கள் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகங்களில் இதற்கான உரிய படிவத்தினை பெற்று, பூர்த்தி செய்து வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பித்து பயன்பெறலாம் என நாமக்கல் மாவட்ட ச.உமா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News September 5, 2024

நாமக்கல்: தேசிய சிலம்பப் போட்டிக்கு தேர்வு

image

குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன உயர்நிலைப் பள்ளியில், சிவம் பவுண்டேஷன் சார்பாக சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் பொத்தனூர் பிருந்தாவன் பள்ளியை சேர்ந்த மாணவி ஆர்.எஸ்.கிருஷாந்த், எல்.சுஷ்மிதா, ஒய்.பிரனீஷ், எஸ்.தரணிஷ் ஆகியோர் முதல் 5 இடங்களையும், எஸ்.யோகப்பிரியன், எஸ்.சாதனா, எஸ்.சுபிக்ஷா, எஸ்.கவின் ஆகியோர் 2ம் இடத்தையும் பெற்றுள்ளனர். இவர்களை தேசிய அளவிலான சிலம்பப் போட்டிக்கு தேர்வு செய்துள்ளனர்.

News September 4, 2024

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

image

நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. ஆவணி மாத புதன்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் என வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

News September 4, 2024

நாமக்கல் மக்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் மாநில அளவில் அமைப்பதை அடுத்து வாரியத்திற்கென அலுவல்சாரா உறுப்பினர்களை நியமித்தல் தொடர்பாக விண்ணப்பங்களை பெறும் பொருட்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் உடன் tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும் தகவல்களுக்கு 04286-280230 தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

எருமப்பட்டி அரசுப்பள்ளியில் மனித கழிவு- எல்.முருகன் கண்டனம்

image

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி 6வது வார்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் அறை சுவரில் மனிதக் கழிவு வீசப்பட்டிருந்தது.  இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். அவர்களை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மனிதக் கழிவு வீசியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் மேலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்

News September 4, 2024

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம்: எம்.பி வாழ்த்து

image

பாரா ஒலிம்பிக் போட்டி 2024ல் பெண்களுக்கான பேட்மிண்டன் SU5 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கும் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவி துளசிமதி-க்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்வதாக நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

News September 4, 2024

கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சி

image

குமாரபாளையத்தில் மேற்கு காலனி சேர்ந்த மும்தாஜ் என்பவர், தனியார் நிதிநிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், அக்கடனை அடைக்க முடியாமல் வந்துள்ளார். இதனையடுத்து கந்துவட்டி கும்பல், மும்தாஜை மிரட்டியுள்ளனர். இதில் மனமுடைந்த அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!