India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அக்ரஹாரம் ஊராட்சி ஓடக்காடு பகுதியில், இயங்கும் சாயப் பட்டறைகளின் கழிவுகள் நெல் வயல்களில் புகுந்த விவகாரம் தொடர்பான புகாரின் பேரில் குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இது குறித்து விவசாய நிலத்தின் உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
நாமக்கல் பரமத்தி சாலையில் அமைந்துள்ள வணிகர் சங்க அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள வணிகர்கள் கலந்து கொண்டனர். இதில் முக்கிய தீர்மானம் நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்கு மீண்டும் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி 25ஆம் தேதி நாமக்கல் மாநகராட்சி முழுவதும் கடைகளை அடைத்து போராட்டம் செய்வதாக முடிவு செய்தனர்.
நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ளது நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று துணை மேயர் பூபதிக்கு, மாநகராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை எம்பி ராஜேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் மேயர் மற்றும் திமுக உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாமக்கல்: குமாரபாளையம் பகுதியில் அதிகளவு போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கல்லூரி பகுதியில் போதை மாத்திரைகளை விற்று வந்த சீனிவாசன், ஸ்ரீதர், சண்முகசுந்தரம் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இவர்களை நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ராசிபுரம் அடுத்த மோளப்பாளையம் கிராமத்தில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் வரும் 25, 26-ல் நடக்கவுள்ளது. இதில், விவசாயிகள், பெண்கள், புதிய தொழில் முனைவோர், மகளிர் குழுவினர் உள்ளிட்டோர் பயன்பெறலாம். இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 98946-89809 என்ற எண்ணை அழைக்கலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 8 கி.மீ., 8 கி.மீ. மற்றும் 6 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் இருந்து வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல், கொல்லிமலையில் தொடர்மழை பெய்து வருவதால் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள பெருக்கால் அருவியின் அடிவாரப்பகுதியில் நெருங்க முடியாத அளவிற்கு தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சி மூலம் பல்வேறு இடங்களில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது அதன் தொடர்ந்து நாளை புதன்கிழமை காலையில் 9:30 மணிக்கு வார்டு எண்.1 பெரிய அய்யம்பாளையம் மற்றும் காலை 11:00 மணிக்கு வார்டு எண்.8 கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
1.நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2.ரேப்கோ வங்கியின் 56 வது நிறுவன நாள் கொண்டாட்டம்
3.டூவிலரில் இருந்து முதியவர் தூக்கி வீசப்படும் காட்சி வெளியீடு
4.முத்தங்யிகில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்
5.நாமகிரியில் சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 19ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் விலையில் மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ5.40 என்ற விலையிலேயே நீடிக்கிறது.
Sorry, no posts matched your criteria.