India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நாளை (22/11/2024) காலை 11 மணியளவில் நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் கூட்டரங்கில் மற்றும் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கூட்டரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் அவர்கள் வாரிசுதாரர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்கள் வாரிசுதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 28 ஆம் தேதி மதியம் 3.30 மணி அளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் உமா கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்துக்கு தொண்டாற்றி வருபவர்களுக்கு ஆண்டு தோறும் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 2024ம் ஆண்டுக்கான விருதுபெற விரும்புவோர் www.tn.gov.in/ta/forms/Department/ பதிவிறக்கம் செய்து முழு விவரங்களுடன் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ 23-11-2024க்குள் விண்ணப்பிக்கலாம்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை,குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும், தொடர்ந்து விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.40 என்ற அளவிலேயே நீடித்து வருகிறது.
நாமக்கல் ரயில் நிலையத்தில், தபால் துறை சார்பில் இயங்கும், ஆர்எம்எஸ் என்னும் ரயில்வே மெயில் சர்வீஸ் தபால் வசதி இல்லை. கரூர் ரயில் நிலையத்தில் 1980 ஆண்டு முதல் ஆர்எம்எஸ் சேவை இயங்கி வருகிறது. இந்த மையத்தை திருச்சிக்கு மாற்றப்படுவதால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என அந்த மையம் கரூரிலேயே இயங்க வேண்டுமென மத்திய ரயில்வே துறை இயக்குனருக்கு நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.
1. மோகனூரில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டம் நடைபெற்றது.
2. ஓடக்காடு பகுதியில், இயங்கும் சாயப் பட்டறைகளின் கழிவுகள் நெல் வயல்களில் புகுந்த விவகாரம் -வட்டாட்சியர் ஆய்வு
3. நாமக்கல்லில் 23ஆம் தேதி நடைபெறும் திமுக செயற்குழு கூட்டம்
4.நாமக்கல்லில் 25ஆம் தேதி கடையடைப்பு
5.மனைவியை குத்திக் கொல்ல முயன்ற கணவன் கைது
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சி மூலம் பல்வேறு இடங்களில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ந்து நாளை புதன்கிழமை காலையில் 9:30 மணிக்கு வார்டு எண்.38 கொண்டிசெட்டிபட்டி மற்றும் காலை 11:00 மணிக்கு வார்டு எண்.37 பெரியப்பட்டி காலனி ஆகிய பகுதிகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – சுப்ரமணியம் (9498173585), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அக்ரஹாரம் ஊராட்சி ஓடக்காடு பகுதியில், இயங்கும் சாயப் பட்டறைகளின் கழிவுகள் நெல் வயல்களில் புகுந்த விவகாரம் தொடர்பான புகாரின் பேரில் குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இது குறித்து விவசாய நிலத்தின் உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
நாமக்கல் பரமத்தி சாலையில் அமைந்துள்ள வணிகர் சங்க அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள வணிகர்கள் கலந்து கொண்டனர். இதில் முக்கிய தீர்மானம் நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்கு மீண்டும் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி 25ஆம் தேதி நாமக்கல் மாநகராட்சி முழுவதும் கடைகளை அடைத்து போராட்டம் செய்வதாக முடிவு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.