Namakkal

News September 9, 2024

மின்னணு பரிவர்த்தனையில் வேளாண் இடுபொருட்கள்

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும், விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருள்களை, ஏ.டி. எம்., கார்டு, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் கொண்ட பணமில்லா மின்னணு பரிவர்த்தனை மூலம், அரசு கணக்கில் செலுத்தி பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏ.டி.எம்., கார்டு அல்லது கூகுள் பே, போன் பே மூலம் செலுத்தி, வேளாண் இடுபொருள்களை பெற்று பயன்பெறலாம்.

News September 9, 2024

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

image

நாமக்கல்லில் சுமார் 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்தினர். இதனடுத்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மற்ற மண்டலங்களின் முட்டை விலை தொடர்ந்து உயர்வதால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News September 9, 2024

அர்த்தநாரீசுவரர் கோயிலில் ஓட்டுநர் வேலை

image

திருச்செங்கோடு பகுதியில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள டிரைவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இக்கோவிலில், 4 ஓட்டுநர் பணியிடங்கள் நிலுவையில் உள்ளன. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், முதலுதவி சான்றிதழ், ஓட்டுநர் அனுபவ சான்றிதழ் மற்றும் நல்ல உடல் தகுதி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 9, 2024

நாமக்கல் உதவி ஆணையர் திடீர் மரணம்

image

நாமக்கல் உதவி ஆணையராக (கலால்) பணிபுரிந்து வந்த புகழேந்தி என்பவருக்கு கடந்த புதன்கிழமை திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து சொந்த ஊரான திருச்சிக்கு சென்ற அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலராகவும் கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார்.

News September 9, 2024

நாமக்கல்: 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்

image

நாமக்கல்: மோகனூர் சாலையில், பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் நாளை செப்.10 காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்தப்படுகிறது. ஓட்டுநருக்கான தகுதிகளாக, 10-ம் வகுப்பு தேர்ச்சி, 24 வயதுக்கு மேலாகவும் 35 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும். விவரங்களுக்கு, 044-28888060, 75, 77, 91542-50563 எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

News September 8, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா இன்று மாலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் நாமக்கல் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் குடிபோதையில் விநாயகர் சிலைகளை எடுத்து செல்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டார்.

News September 8, 2024

நாமக்கல் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்ட இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது . இதில் மாவட்ட இரவு ரோந்து அதிகாரி இமயவரம்பன், காவல் துணைக் கண்காணிப்பாளர்- 9498230141 உட்கோட்டம் நாமக்கல்: கபிலன் காவல் ஆய்வாளர்- 9498178628, இராசிபுரம்: செல்வராஜன், காவல் ஆய்வாளர்- 9498158595, திருச்செங்கோடு: முருகேசன், காவல் ஆய்வாளர்- 9498133890 வேலூர்: ராதா காவல் உதவி ஆய்வாளர்- 9498174333 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

News September 8, 2024

நாமக்கல்: குமாரபாளையம் சாலை மூடல்

image

குமராபாளையம் முதல் திருச்செங்கோடு ஆனங்கூர் வழியாக செல்லும் சாலையில் இருக்கும் ரயில்வே பாதையில் மின்சார கேட் அமைப்பதால், ஆனங்கூர் இரயில்வே கேட் (10.09.2024) காலை 6 மணி முதல் (12.09.2024) மாலை 6 மணி வரை 3 நாட்கள் மூடப்பட்டு இருக்கும். எனவே, பொதுமக்கள் மாற்று பாதையை பயன்படுத்திக் கொள்ள ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News September 8, 2024

நாமக்கல்லில் காய்கறி விலை நிலவரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று காய்கறி பூ விலை நிலவரம்: கத்தரி ரூ.50, தக்காளி ரூ.24, வெண்டை ரூ.18, அவரை ரூ.72, கொத்தவரை ரூ.28, முருங்கை ரூ.35, முள்ளங்கி ரூ.30, புடல் ரூ.20, பாகல் ரூ.40 மற்றும் பீர்க்கன் ரூ.38. இதனிடையே நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில். இன்று ரூ.10 விலை குறைந்து ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்டது

News September 8, 2024

பாமக தலைவர் அன்புமணிக்கு அழைப்பிதழ்

image

பரமத்திவேலூர் பகுதியில் உள்ள கந்தசாமி கண்டார் கலை கல்லூரியில் வரும் 11ஆம் தேதி நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்த விழா அழைப்பிதழை நேற்று இரவு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம், மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், தமிழ்நாடு உழவர் பேரியக்க துணைத் தலைவர் பொன் ரமேஷ், சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள், மாவட்ட துணைத் தலைவர் தினேஷ் பாண்டியன் ஆகியோர் கல்லூரி நிர்வாகத்தினருடன் இணைந்து வழங்கினர்.

error: Content is protected !!