India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 555 காசுகளாக அதிகரித்துள்ளது. முட்டை விலை உயர்வடைந்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களின் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 27.11.2024 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு குறைகள் ஏதாவது இருப்பின் அதனை இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.
1. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
2. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுசாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
3.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பைரவர் கோயில்களில் தேய்பிறை அஸ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
4.நாமக்கல்லில் இன்று முட்டை விலை உயர்வு
5.நாமக்கல்லில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 23ஆம் தேதி நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.55 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை இன்று 5 காசுகள் விலை உயர்த்தப்பட்டு ரூ5.55 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – சாந்தகுமார் (9498123060), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – ரெங்கசாமி (9487539119), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம், பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
பாரதிய கிசான் சங்கம் 6வது மாநில பிரதிநிதிகள் மாநாடு மற்றும் விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு மாநாடு இன்று மதுரை அலங்காநல்லூர் ரோடு சிக்கந்தர் சாவடி வேளாண் உணவு வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. மாநாட்டிற்காக சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணி தலைமையில் நாமக்கல்லிலிருந்து விவசாயிகள் பலர் வாகனத்தில் மதுரை சென்றனர். சென்று விவசாயிகளை பலர் வழியனுப்பி வைத்தனர்.
நவ. 25 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு நேற்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்ற திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு முன் திமுக இளைஞர் அணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் சந்தித்து, பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ்.பகுதியில் தனியார் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நிரந்தர தொழிலாளர்கள் ஏராளமானோர் இன்று ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரத போராட்டம் ஈடுபட்டனர். காகித ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்காததை கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நவ. 1-இல் கிராமசபைக் கூட்டம் நடைபெற இருந்தது. பல்வேறு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (நவ.23) காலை 11 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.