Namakkal

News November 29, 2024

நாமக்கல் ஆஞ்சநேயர் அபிஷேகத்திற்கு முன்பதிவு

image

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலக புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் வருகின்ற 2025 ஆண்டிற்கான முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் நாள் ஒன்றிற்கு 6 பங்குகள் கொண்ட அபிஷேகம் நடைபெறும் 1 பங்கு கட்டணம் ரூ 7000 ஆகும் முன்பதிவிற்கு 04286 – 233999 என்ற அலுவல எண்ணிற்கே மற்றும் நேரில் சென்ட தொடர்பு கொள்ளலாம்.

News November 29, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

2024ஆம் ஆண்டுக்கான சமூக நீதி தந்தைப் பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கம் பரிசாக வழங்கப்பட உள்ளது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் மற்றும் அதனால் பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் உயர எடுத்த நடவடிக்கை மற்றும் எய்திய சாதனைகள் குறித்த விவரங்களுடன், விண்ணப்பங்களை பெயர் முகவரியுடன் வரும் டிசம்பர் 20க்குள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News November 28, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
2.கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஆட்சியர் ஆய்வு
3.நாமக்கல்லில் இன்று முட்டை விலை நிலவரம் -ரூ 5.65
4.நாமக்கல்லில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
5.நாம் தமிழர் கட்சியிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் விலகல்

News November 28, 2024

நாமக்கல் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – கெங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News November 28, 2024

நாமக்கல்லில் தாயிக்கு கோயில் கட்டிய மகன்

image

கூலிப்பட்டியை சேர்ந்த பிரபு என்பவர் தன் தாய் உயிருடன் இருக்கும் போதே அவருக்கு 1500 சதுரஅடி நிலத்தை விலைக்கு வாங்கி 80கிலோ எடை கொண்ட 3 அடி நிளமுள்ள மார்பிள் திருவுருவ சிலையை அமைத்து கோயில் கட்டியுள்ளார். இந்த கோயிலை உலக பெற்றோர் தினம் அன்று தன்னை சிறுவயத்தில் கஷ்டப்பட்டு வளர்த்த தாயை வைத்தே திறந்து அவருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்நிகழ்வு சுற்றுபுற மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

News November 28, 2024

நாமக்கல்லில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

நாமக்கல்சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 29 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தின் வாயிலாக வேளாண் இடுபொருட்கள், இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறை செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள மற்றும் தங்களது கோரிக்கையை தெரிவிக்கலாம்.

News November 28, 2024

ஔவையார் விருது: நாமக்கல் கலெக்டர் தகவல்

image

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு 2025ம் ஆண்டில் சர்வதேச மகளிர் தின விழாவில் ஒளவையார் விருது வழங்கிட கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண் 9150057452-ல் தொடர்பு கொண்டு விபரம் தெரிந்து கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா தெரிவித்துள்ளார்.

News November 28, 2024

நாமக்கல் அருகே விபத்து: ஒருவர் பலி

image

ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் அருள்குமார், 22 இவர் தேர்வுக்கு விண்ணப்பிக்க பெங்களூரு சென்று விட்டு, ஆம்னி பஸ்சில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். நேற்று முன்தினம் குமாரபாளையம் டீச்சர்ஸ் காலனி அருகே சென்றபோது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அருள்குமார், டிரைவர் ஜெயக்குமார், கிளீனர் ஆகிய மூவரும் காயமடைந்தனர். அருள்குமார் உயிரிழந்தார்.

News November 28, 2024

நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் மிகச்சிறந்த சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்கான சிறப்பாக செயல் புரிந்தவர்களுக்கு கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண் 9150057452-ல் கொண்டும் விபரம் தெரிந்து கொள்ளுமாறு நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News November 27, 2024

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!