India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற ஏப்.1 முதல் மாவட்ட விளையாட்டுப் பயிற்சித்திடலில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். நீச்சல் பயிற்சி 12 நாட்களுக்கு கட்டணம் ரூ.1416 ஆகும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு – 8220310446 க்கு தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (29/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), திருச்செங்கோடு – கிருஷ்ணன் (9498198444) ,வேலூர் – சங்கீதா (9498210142) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம், நாமக்கல்லில் இன்று 29ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் 10 காசுகள் உயர்த்தப்பட்டு, ஓரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று 28ஆம் தேதி ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 என இருந்த நிலையில், தற்போது 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோகனூர், ஒருவந்தூரில் வரலாற்று சிறப்புமிக்க பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு, திருமணத் தடை உள்ள பெண்கள் அம்பிகையை வணங்கி, திருமணம் முடிந்ததும் மணமக்கள் மாலையும், கழுத்துமாக வந்து அம்மனை வணங்குகின்றனர். இவ்வாலயத்தில் உப்பு மண்ணையே பிரசாத விபூதியாக பெற்று செல்கின்றனர். ஒருவரம் கேட்டால் பலவரம் கொடுப்பாள் ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் என இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். SHARE IT!

நாமக்கல்: தங்க நகை தொழிலாளிகளிடம் தங்க துகல் கலந்த மண் எனக் கூறி, வெறும் மணலை ரூ.68 லட்சத்திற்கு விற்ற குஜராத்தைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கேரளாவில் நேற்று(மார்ச் 28) கைது செய்தனர். இதுகுறித்த விசாரணையில், தங்கம் செய்யும் தொழிற்சாலையிலிருந்து சேதமாகும் தங்கத் துகள்கள் கலந்த மண்ணை தாங்கள் எடுத்து வந்துள்ளதாகக் கூறி தொழிலாளிகளை இந்த குஜராத் கும்பல் ஏமாற்றியது தெரிய வந்தது.

நாமக்கல் நகர் மையப் பகுதியில், உலக புகழ் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பங்குனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10 மணிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் கைலாசநாதர் என்றும் அன்னை அறம்வளர்த்தநாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இந்த கோயில் 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டில் வல்வில் ஓரி மன்னனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கு, கைலாசநாதரிடம் வேண்டிக்கொள்ள, கலைகளில் சிறப்பிடம் பெறலாம், அம்பாளை வணங்கிட புத்திரதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம், நாமக்கல்லில் இன்று 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் 25 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 27ஆம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.25 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 25 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று நாமக்கல் – ஆகாஷ் ஜோசி ( 97110 43610), ராசிபுரம்- விஜயக்குமார் ( 94981 04763), திருச்செங்கோடு – கிருஷ்ணன் ( 94981 98444), மற்றும் வேலூர் – சங்கீதா ( 94982 10142) ஆகியோர் என்று நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவர்.

நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள நூலகத்தில் , அரசுப் பள்ளி அளவில் வேறு எங்குமே இல்லாத வகையில் 12,000 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு, பழங்காலம் முதல் தற்காலம் வரை பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள், தனித்தனி தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. மேலும், மாணவர்கள் புத்தகம் வாசிப்பதற்காகவே நூலகத்துடன் இணைந்த சகல வசதிகளுடன் கூடிய வாசிப்பு அறையும் உள்ளது. SHARE IT!
Sorry, no posts matched your criteria.