Namakkal

News November 30, 2024

நாமக்கல்லில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ் பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – ஆகாஷ் ஜோசி (9711043610), ராசிபுரம் விஜயகுமார் (9498104763), திருச்செங்கோடு -இமயவரம்பன் (9498230141), வேலூர்- சங்கீதா (9498210145) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News November 30, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 12 மி.மீ., நாளை 54 மி.மீ., நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 78 மி.மீரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் 3ஆம் தேதி 28 மி.மீரும், 4ஆம் தேதி 30 மி.மீரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 84.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 30, 2024

நாமக்கல்: முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்கலாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள T.Pharm, B.PHARM சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வரும் 5ஆம் தேதி வரை விண்ணப்ப காலம் நீட்டிப்பு செய்யப்படுள்ளது என நாமக்கல் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு கூறியுள்ளார்.

News November 30, 2024

நாமக்கல் மாவட்டத்திற்கு கனமழை அறிவிப்பு

image

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக உருவெடுத்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று மாலைக்குள் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதவிர நாமக்கல் மாவட்டத்தில் இன்று சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஊரில் மழையா கமெண்ட் பண்ணுங்க.

News November 29, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நா.த.கவினர் 75 பேர் திமுகவில் இணைவு
2.தனியார் கல்லூரி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை
3.விவசாயிகளுக்கு விருது வழங்கிய மாவட்ட ஆட்சியர்
4.ராகுல் காந்தியை சந்தித்த நாமக்கல் எம்பி ராஜேஷ்குமார்
5.நாமக்கல் ஆஞ்சநேயர் அபிஷேகத்திற்கு முன்பதிவு அவசியம்

News November 29, 2024

நா.த.கவினர் 75 பேர் திமுகவில் இணைவு

image

நாமக்கல்லில் நேற்று நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் உட்பட அக்கட்சியில் இருந்து 50 பேர் கூண்டோடு விலகினர் இன்று நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் வினோத்குமார் அக்கட்சியில் இருந்து நேற்று விலகிய நிலையில் இன்று திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பியுமான ராஜேஷ்குமார் முன்னிலையில் ஆதரவாளர்கள் 75 பேருடன் திமுகவில் இணைந்தார்.

News November 29, 2024

நாமக்கல்லில் இன்றைய இரவு ரோந்து காவலர்கள்

image

நாமக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நாமக்கல் இராசிபுரம் திருசெங்கோடு பரமத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News November 29, 2024

விவசாயிகளுக்கு விருது வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று, விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது.இந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்து பேசினர். மேலும் இதன் ஒரு பகுதியாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பாரம்பரிய காய்கறி சாகுபடி செய்த, விவசாயிகளுக்கு விருதுகளை இன்று வழங்கினார்.

News November 29, 2024

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய பூக்கள் விலை

image

நாமக்கல் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்: அரளி ரூ.300, வெள்ளை அரளி ரூ.300, மஞ்சள் அரளி ரூ.350, மல்லி ரூ.1200-900, செவ்வரளி ரூ.350, முல்லை ரூ.900, நந்தியாவட்டம் ரூ.60, சி.நந்தியாவட்டம் ரூ.300, காக்கட்டான் ரூ.280, சம்பங்கி ரூ.70, சாதா சம்பங்கி ரூ.120 ஆகிய விலைகளில் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

News November 29, 2024

நாமக்கல்: கடன் வழங்கும் திட்டம் 

image

நாமக்கல் மாவட்டத்தில் வாழும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ள இலங்கைத்தமிழர்களுக்கு வங்கிகள் மூலம் சிறு மற்றும் குறு வணிகங்களுக்கு கடன் உதவி வழங்க தகுதியான பயனாளிகளை கண்டறிந்து மாவட்ட அளவிலான தொழில்நுட்பக்குழு மூலம் ₹1 லட்சம் முதல் ₹2 லட்சம்வரை கடன் வழங்க உள்ளது விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக 3ம் தளம், அகதியர் மறுவாழ்வு மையத்தில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!