India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் அருகே அமைந்துள்ள செல்லப்பம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து நாமக்கல் நோக்கி வந்துகொண்டிருந்த லாரியும் – நாமக்கல்லிலிருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த பிக்கப் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பிக்கப் வேன் ஓட்டிய ஓட்டுநரும், அவருடன் இருந்த மற்றவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 12ஆம் தேதி நடைபெற்றது இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.90ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது தொடர் மழை குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் கடந்த சில தினங்களாக முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.90 ஆகவே நீடிக்கிறது.
1.காளான் உற்பத்தி நிறுவனத்தில் ஆட்சியர் ஆய்வு
2.பேளுக்குறிச்சியில் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு
3.நாமக்கல் காவல்துறை விடுத்த மழைக்கால எச்சரிக்கை
4.நாமக்கல்லில் அகல் விளக்கு விற்பனை படுஜோர்
5.நாமக்கல் ஆஞ்சநேயர் வெண்ணை காப்பு அலங்காரம் ரத்து
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு விருந்து பணிக்காக எஸ் பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – யுவராஜ் (94981 77823), ராசிபுரம் குணசீலன் (94981 20852), திருச்செங்கோடு -மலர்விழி (9498109579), வேலூர்- சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலாகும். இந்த கோவிலில் சாமிக்கு கார்த்திகை மார்கழி தை ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். இன்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்வதாக இருந்தது. தொடர் மழையின் காரணமாக இன்று நடைபெற இருந்த வெண்ணை காப்பு அலங்காரம் மற்றொரு நாளைக்கு மாற்றப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் மற்றும் தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் வாகனத்தை இயக்க வேண்டாம் எனவும், ஆறு குளம் போன்ற நீர்நிலைப் பகுதிகளில் குழந்தைகளை தனியாக குளிக்க செல்வதை அனுமதிக்க வேண்டாம் எனவும், வாகனங்களை இயக்கும்போது கவனமாகவும் மெதுவாகவும் இயக்குமாறு நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மழைக்கால எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் மற்றும் தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் வாகனத்தை இயக்க வேண்டாம் எனவும், ஆறு குளம் போன்ற நீர்நிலைப் பகுதிகளில் குழந்தைகளை தனியாக குளிக்க செல்வதை அனுமதிக்க வேண்டாம் எனவும், வாகனங்களை இயக்கும்போது கவனமாகவும் மெதுவாகவும் இயக்குமாறு நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மழைக்கால எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்திகை மாத வியாழக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர்சிறப்பு அலங்காரம் பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
நாளை கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் களிமண்ணால் தயார் செய்யப்பட்ட, ஒரு முகம், 2 முகம், 3 முகம், பஞ்சமுகம், அச்சு விளக்குகள், பாவை விளக்கு உள்ளிட்ட பல்வேறு விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மண் விளக்கு, அச்சு விளக்கு, மாடல் விளக்கு, சுவாமி விளக்கு, கலர் விளக்கு உள்பட 40 வகையான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.