Namakkal

News December 14, 2024

மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

image

நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், இணைத்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் மூட்டு எலும்பு பரிசோதனை முகாம் நாளை,காலை முதல் 1.00 மணி வரை பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துத்திக்குளம் தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 14, 2024

கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் இனி வரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் பல இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. பகல் வெப்பம் 78.8-க்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8-க்கு மிகாமலும் இருக்கக் கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News December 14, 2024

நாமக்கல்லில் இலவச மீன் வளர்ப்பு பயிற்சி

image

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு நெய்கெளுத்தி மீன்வளர்ப்பு ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் 04286 266345, 266650 735855484 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

News December 14, 2024

ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொது மாவட்ட வினியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், திருத்தம் புதிய ரேஷன் அட்டை கோருதல், மொபைல் எண் உள்ளிட்ட ரேஷன் அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் குறைதீர் முகாம் இன்று நடக்கிறது. நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலூர், குமாரபாளையம் ஆகிய வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடக்கிறது.

News December 13, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நாமக்கல் மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருநாள் அனைத்து கோயில்களில் நடைபெற்றது.
2.காவிரி ஆற்றில் நீர்வரத்து குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு
3.தேசிய அளவிலான ஆராய்ச்சி போட்டி: நாமக்கல் மாணவர் வெற்றி
4.புதுப்பட்டி மேல் ஏரிக்கு அதிகரித்த நீர் வரத்து
5.செம்மேட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை

News December 13, 2024

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – சுப்பிரமணியன் (9498173585), திருச்செங்கோடு – திவ்யா (8973353394), வேலூர் – கங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 13, 2024

தேசிய அளவிலான ஆராய்ச்சி போட்டி: நாமக்கல் மாணவர் வெற்றி

image

எக்செல் பார்மசி கல்லூரியில் இறுதியாண்டு பி.பார்ம் மாணவர் திலீப்குமார், இந்திய பார்மசி பட்டதாரி சங்கம் 36வது ஆண்டு விழாவில் நடத்திய மதிப்புமிக்க இ-போஸ்டர் போட்டியில் 3ம் பரிசு பெற்றார். இந்த நிகழ்வு கேரளாவின் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. இந்த தேசிய அளவிலான ஆராய்ச்சிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு கல்லூரி சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

News December 13, 2024

நாமக்கல்லில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், புதிய குடும்ப அட்டை கோருதல், கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை தெரிவிக்க குறைதீா் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் மற்றும் குமாரபாளையம், வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

News December 13, 2024

தனிநபர் வீட்டு நூலகங்களுக்கு பரிசு 

image

தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தை தேர்ந்தெடுத்து விருது மற்றும் சான்றிதழ் ஆகியன நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் புத்தக திருவிழாவின்போது வழங்கப்பட உள்ளது. வீட்டில் நூலகம் வைத்து பராமரிப்பவர்கள், 31.12.2024 க்குள் dlonkoffice@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் மாவட்ட நூலக அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News December 13, 2024

சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் அதிகாலை நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேய பகவான் மஞ்சள் நிற ஆடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் மகா தீபம் நடைபெற உள்ளது.

error: Content is protected !!