India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு மதுரை, திருச்சி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க் ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
உரிய ஆவணங்களுடன் விண்ணபிக்க <

நாமக்கல்: குமாரபாளையத்தைச் சேர்ந்த முத்துவேல்(70) எனும் தறிப்பட்டறை தொழிலாளி வட்டமலை அருகே தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது மகன், மகளைப் பார்க்க நேற்று முன் தினம் மதியம் சென்று விட்டு திரும்பிய போது சேலம் – கோவை பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியக வந்த கார் முத்துவேல் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 238 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ஜூலை 15 ஆம் தேதி தொடங்கும் இம்முகாம் தொடர்ந்து செப்டம்பர் 30ந் தேதி வரை நடைபெறும். இம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படும். எனவே முகாம் நடைபெறும் இடம், நாள் குறித்த தகவல்கள் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக தெரிவிக்கப்படும் என்று கலெக்டர் துர்க்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் இன்று (ஜூலை 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ள போதிலும், முட்டை விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ரூ.5.75 ஆகவே நீடிக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று ஜூலை-08 நாமக்கல் ராஜமோகன் 94422-56423, வேலூர் ரவி 94438-33538 – ராசிபுரம் கோவிந்தசாமி 94981-69110- திருச்செங்கோடு டேவிட் பாலு 94865-40373- திம்மநாயக்கன்பட்டி ரவி 94981-68665- குமாரபாளையம் ரகுநாதன் 97884-48891ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 08.07.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். நாமக்கல் கோவிந்தராசன் 94981 70004), ராசிபுரம் ஆனந்தகுமார் 94981 06533), திருச்செங்கோடு ராதா 94981 74333), வேலூர் ஷாஜகான் 9498167357), ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நாளை கரூர் மற்றும் நாளை மறுநாள் நாமக்கல் மாவட்டங்களுக்கு 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் காலை 10 மணிக்கு அரசு ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

நாமக்கல்: ராசிபுரத்தில் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் வல்வில் ஓரி மன்னன் கொல்லிமலையை தலைநகராக கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்தபோது அவரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறது. இங்கு வேண்டிக்கொள்ள கலைகளில் சிறப்பிடம் பெறலாம், அம்பாளை வணங்கிட புத்திரதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. SHARE IT!

நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வரும் ஜூலை 14-ம் தேதி முதல் இலவச போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பயிற்சி 30 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு, தேநீர் அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழும் வழங்கப்படும். பயிற்சியில் சேர 8வது படித்திருந்தால் போதும். மேலும் விபரங்களுக்கு 8825908170 தொடர்பு கொள்ளவும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகளில் நடைபெற உள்ளதால் நாளை (ஜூலை 9) மின் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களாக தற்போது மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. எனவே, நாளை நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் வழக்கம்போல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.