Namakkal

News July 10, 2025

நாமக்கல்லில் முட்டை 20 காசு குறைவு

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையார்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று கொள்முதல் விலையில் 20 காசுகள் குறைக்கப்பட்டு 5.55 ஆக அறிவிக்கப்பட்டது.

News July 10, 2025

நாமக்கல் மக்களே இந்த லிங்க்கை தொடாதீர்கள்!

image

நாமக்கல்: கடந்த சில நாள்களாக ரூ.7000க்கு கீழ் உள்ள போக்குவரத்து அபராதங்கள்(Traffic Fines) ரத்து செய்யப்படும் என கூறி ஒரு மெசேஜ் பரவி வருகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் பறிக்கப்படும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, இந்த போலி லிங்க்களை திறக்காமல் தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News July 10, 2025

2001 பயனாளிகளுக்கு ரூ.33.18 கோடியில் நலத்திட்ட உதவிகள்!

image

தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 10) நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 2001 பயனாளிகளுக்கு ரூ.33.18 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

News July 10, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன ரோந்து போலீசார் விபரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் ஜூலை 9 ஆம் தேதி இரவு, 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்: நாமக்கல்- பாலசுப்ரமணியம் ( 9442851418), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498169110), பள்ளிபாளையம் – வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – ரகுநாத் ( 9788448891), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .

News July 9, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 9) நாமக்கல் – கோமதி ( 9790948987), ராசிபுரம் – சுரேஷ் ( 9788015452), திருச்செங்கோடு – சிவகுமார் ( 9498177601), வேலூர் – சினிவாசன் (9498176551 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .

News July 9, 2025

நாமக்கல்லில் குரூப் 4 தேர்வை 36,436 பேர் எழுதுகின்றனர்

image

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், சேந்தமங்கலம், மோகனூர், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் ஆகிய 7 தாலுகாக்களில் 124 மையங்களில் வரும் 12ம் தேதி சனிக்கிழமை நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 36,436 பேர் எழுதுகின்றனர். இத்தேர்வு காலை 09.30 மணியளவில் தொடங்கவுள்ளதால், தேர்வர்கள் அனைவரும் காலை 9 மணிக்குள் தேர்வு கூடத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 9, 2025

நாமக்கல்: அவசர காலத்தில் உதவும் எண்கள்!

image

நாமக்கல் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. நாமக்கல் மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News July 9, 2025

நாமக்கல்: பெண்களுக்கு ரூ.50,000 திருமண உதவி!

image

தமிழக அரசு சார்பில், பெற்றோரில்லாத பெண்களுக்காக, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றோ அல்லது இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். SHARE IT (<<17007667>>தொடர்ச்சி 1/2<<>>)

News July 9, 2025

திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

image

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

News July 9, 2025

நாமக்கல்: அரசு அலுவலகங்களில் சூப்பர் வேலை வாய்ப்பு!

image

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 18 வயது முதல் 27 வயதுரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 24ஆம் தேதியே கடைசி நாள். அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE!

▶️விண்ணப்பிக்கும் முறை (<<17001739>>CLICK HERE<<>>)

error: Content is protected !!