Namakkal

News November 17, 2024

நாமக்கல்லில் கூட்டுறவு வார விழா

image

நாமக்கல் மாவட்டம் கூட்டுறவுத்துறை 71-ஆவது அனைத்திந்தியக்கூட்டுறவு வார விழா-2024 கூட்டுறவுகளிடையே ஒருங்கிணைப்பையும் பங்களிப்பையும் வலுப்படுத்துதல் நாளை (18.11.2024) திங்கட்கிழமை நாமக்கல் பரமத்தி ரோடு கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் பிற்பகல் 3:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் கலெக்டர், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

News November 17, 2024

நாமக்கலில் இன்று முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் நேற்று 16ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் 1 முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே ரூ.5.40 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

News November 17, 2024

2ஆவது நாள் வாக்காளர் சிறப்பு முகாம்

image

நாமக்கல்லில் வாக்காளர் சிறப்பு முகாம் 2ம் நாள் நடைபெறுகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள், ஆதார் எண் இணைப்பவர்கள், பெயர் நீக்கம், பெயர், வயது, பாலினம், கதவு எண், முகவரி பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும், தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாற்றுதல் போன்ற பணிகளுக்கு தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுசாவடிகளில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ளலாம்.

News November 17, 2024

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

image

1) இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்து நாமக்கல்லில் காலை 11.30க்கு ஆர்ப்பாட்டம். 2) பாரதிய கிசான் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நாமக்கல்லில் நடைபெறுகிறது. 3) நாமக்கல் கவிஞர் பேரவை சார்பில் நேரு பிறந்த நாள் சேவையாளருக்கு பாராட்டு விழா நாமக்கல்லில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது.4) நாமக்கல்லில் பல்வேறு பகுதியில் மழை.

News November 16, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
2.நாமக்கல்லில் கார்த்திகை மாதம் தொடக்கம் – கோயில்களில் குவிந்த பக்தர்கள்
3.நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவச அலங்காரம் அணிவிப்பு
4.நாமக்கல் மாவட்டதில் பல்வேறு இடங்களில் கொட்டிய மழை
5.நாமக்கல்: சாலை விபத்தில் மூவர் பலி

News November 16, 2024

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – சுகவனம் (9498174815), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News November 16, 2024

நாமக்கல்லில் முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 16ந் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே ரூ 5.40 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது.

News November 16, 2024

அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

image

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் தலைமை டாக்டர் பாரதி தலைமையில் இன்று நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் தங்கமணி, திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. சுகந்தி, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் (காசநோய்) வாசுதேவன் உள்பட பலர் பங்கேற்றனர். மருத்துவமனைக்கு தேவையான 30 போர்வைகளை முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்க, தலைமை டாக்டர் பாரதி பெற்றுக்கொண்டார்.

News November 16, 2024

சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் பலி

image

நாமக்கல், பரமத்திவேலூர் தாலுக்கா ஜேடர்பாளையம் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் கருக்கம்பாளையத்தைச் சேர்ந்த சிவா, பூமேஷ், சிறுகிணத்து பாளையம் சேர்ந்த சக்திநாதன் மூன்று பேரும் ஈரோட்டில் இருந்து அசோக் லைலாண்ட் தோஸ்த் வாகனத்தில் கபிலர்மலை நோக்கி வந்த போது தண்ணீர் பந்தல் அருகே சாலையின் எதிரே வந்த லாரியில் மோதி மூன்று பேர்களும் பலியாகினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.

News November 16, 2024

ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்க கவசம்

image

நாமக்கல் நகரின் மத்தியில் நாமகிரி தாயாரையும் நரசிம்ம பெருமாளையும் இரு கைகளை கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் சுவாமி அருள் பாலித்து வருகிறார். இதனிடையே இன்று 16ஆம் தேதி கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மதியம் ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பல்வேறு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயர் சுவாமி வழிபட்டனர்.

error: Content is protected !!